Latest Updates
-
உங்க பல் மஞ்சளா இருக்கா? வெள்ளையாக்க இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
வாழைப்பழமும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
AC ரிமோட்டில் நீங்கள் செய்யும் இந்த தவறு உங்க கரண்ட் பில்லை தாறுமாறா அதிகரிக்குமாம் - கரெக்ட்டா யூஸ் பண்ணுங்க -
ஜூலை 07-ல் வக்ர புதனால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண கஷ்டம் குறைந்து செல்வம் பெருகும்.. -
தமிழ்நாட்டின் இந்த ஒரு மாவட்டத்தை மட்டும் ஆங்கிலேயர்களால் ஆட்சி செய்யவே முடியவில்லையாம் - ஏன் தெரியுமா? -
1 கைப்பிடி கறிவேப்பிலை இருந்தா.. இப்படி குழம்பு செய்யுங்க.. 1 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
பாபா வங்கா கணிப்பு படி 2026-ன் இரண்டாம் பாதியில் கோடீஸ்வரராகும் யோகமுள்ள 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க.. -
தயிர் சாதத்தை இந்த பொருள் சேர்த்து ஒரு தடவை செஞ்சு பாருங்க - இதுவரைக்கும் நீங்க சாப்பிடாத டேஸ்ட்ல இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 நபர்கள் சமூகத்தில் எல்லோராலும் அவமதிக்கப்படுவார்களாம் - அவர்கள் யார் தெரியுமா?
1/2 கப் கடலைப்பருப்பு இருந்தா டக்குனு இந்த குருமாவை செய்யுங்க - இட்லி, தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
Kadalai Paruppu Kurma Recipe in Tamil: பலரது வீடுகளில் காலை அல்லது இரவில் இட்லி அல்லது தோசைதான் பிரதான உணவாக இருக்கும். உங்கள் வீட்டில் இன்று இரவு இட்லி அல்லது தோசை நினைக்கிறீர்களா? அதற்கு வழக்கமான சட்னி அல்லது சாம்பார் செய்யாமல் புதிதாக ஏதாவது சைடிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? உங்கள் வீட்டில் கடலைப்பருப்பு உள்ளதா? அப்படியானால் அதை வைத்து ஒரு அட்டகாசமான சைடிஷ் செய்யுங்க.

இந்த கடலைப்பருப்பு குருமா செய்வது மிகவும் ஈஸி. மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும். இந்த குருமா இட்லி, தோசை மட்டுமின்றி சப்பாத்தி, பூரியுடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். இந்த குருமா சுவையானதாக இருப்பதுடன் செய்வதற்கும் மிகவும் எளிதானது. காய்கறி இல்லாத நேரத்தில் இந்த குருமாவை டக்குனு வைச்சுரலாம்.
உங்களுக்கு சுவையான கடலைப் பருப்பு குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கடலைப் பருப்பு குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- ½ கப் கடலைப்பருப்பு
- 2 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 2 டீஸ்பூன் சாம்பார் பொடி
- ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- 3 ஸ்பூன் துருவிய தேங்காய்
- 3 டீஸ்பூன் எண்ணெய்
- ½ டீஸ்பூன் கடுகு
- 1 டீஸ்பூன் சீரகம்
- அலங்கரிக்கச் சிறிது கொத்தமல்லி இலைகள்
- 2 சிட்டிகை பெருங்காயத் தூள்
செய்முறை:
- 2 கப் தண்ணீரில் கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். இது பருப்பு எளிதாக வேக உதவும்.
- இதனுடன் மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளித் துண்டுகளைச் சேர்க்கவும்.
- பின்னர் சாம்பார் பொடி மற்றும் மஞ்சள் தூளைச் சேர்க்கவும்.
- சாம்பார் பொடிக்குப் பதிலாக, 1 ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் 1 ஸ்பூன் மல்லித் தூளையும் நீங்கள் சேர்க்கலாம்.
- 5 விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேகவைக்கவும்.
- பருப்பு வெந்து கொண்டிருக்கும் நேரத்தில் தேங்காய் மற்றும் சீரகத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- குக்கரில் பிரஷர் வெளியானதும், அதை வெளியே எடுத்து தனியாக வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- கடுகு பொரியத் தொடங்கியதும், வேகவைத்த கடலைப்பருப்பு கலவையைச் சேர்க்கவும்.
- இப்போது இதனுடன் உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை இதனுடன் சேர்க்கவும்.
- நன்றாகக் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- இறுதியாக கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரிக்கவும்.
- இந்த குழம்பு ஆறியதும் கெட்டியாகிவிடும். எனவே அதற்கேற்ப தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
- அவ்வளவுதான் சூடான இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications