1/2 கப் கடலைப்பருப்பு இருந்தா டக்குனு இந்த குருமாவை செய்யுங்க - இட்லி, தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும்

Posted By:

Kadalai Paruppu Kurma Recipe in Tamil: பலரது வீடுகளில் காலை அல்லது இரவில் இட்லி அல்லது தோசைதான் பிரதான உணவாக இருக்கும். உங்கள் வீட்டில் இன்று இரவு இட்லி அல்லது தோசை நினைக்கிறீர்களா? அதற்கு வழக்கமான சட்னி அல்லது சாம்பார் செய்யாமல் புதிதாக ஏதாவது சைடிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? உங்கள் வீட்டில் கடலைப்பருப்பு உள்ளதா? அப்படியானால் அதை வைத்து ஒரு அட்டகாசமான சைடிஷ் செய்யுங்க.

Kadalai Paruppu Kurma Recipe How to Make at Home in Tamil

இந்த கடலைப்பருப்பு குருமா செய்வது மிகவும் ஈஸி. மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும். இந்த குருமா இட்லி, தோசை மட்டுமின்றி சப்பாத்தி, பூரியுடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். இந்த குருமா சுவையானதாக இருப்பதுடன் செய்வதற்கும் மிகவும் எளிதானது. காய்கறி இல்லாத நேரத்தில் இந்த குருமாவை டக்குனு வைச்சுரலாம்.

உங்களுக்கு சுவையான கடலைப் பருப்பு குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கடலைப் பருப்பு குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- ½ கப் கடலைப்பருப்பு
- 2 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 2 டீஸ்பூன் சாம்பார் பொடி
- ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- 3 ஸ்பூன் துருவிய தேங்காய்
- 3 டீஸ்பூன் எண்ணெய்
- ½ டீஸ்பூன் கடுகு
- 1 டீஸ்பூன் சீரகம்
- அலங்கரிக்கச் சிறிது கொத்தமல்லி இலைகள்
- 2 சிட்டிகை பெருங்காயத் தூள்

செய்முறை:

- 2 கப் தண்ணீரில் கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். இது பருப்பு எளிதாக வேக உதவும்.

- இதனுடன் மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளித் துண்டுகளைச் சேர்க்கவும்.

- பின்னர் சாம்பார் பொடி மற்றும் மஞ்சள் தூளைச் சேர்க்கவும்.

- சாம்பார் பொடிக்குப் பதிலாக, 1 ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் 1 ஸ்பூன் மல்லித் தூளையும் நீங்கள் சேர்க்கலாம்.

- 5 விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேகவைக்கவும்.

- பருப்பு வெந்து கொண்டிருக்கும் நேரத்தில் தேங்காய் மற்றும் சீரகத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

- குக்கரில் பிரஷர் வெளியானதும், அதை வெளியே எடுத்து தனியாக வைக்கவும்.

- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு சேர்த்து பொரிய விடவும்.

- கடுகு பொரியத் தொடங்கியதும், வேகவைத்த கடலைப்பருப்பு கலவையைச் சேர்க்கவும்.

- இப்போது இதனுடன் உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை இதனுடன் சேர்க்கவும்.

- நன்றாகக் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

- இறுதியாக கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரிக்கவும்.

- இந்த குழம்பு ஆறியதும் கெட்டியாகிவிடும். எனவே அதற்கேற்ப தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

- அவ்வளவுதான் சூடான இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Monday, July 6, 2026, 19:16 [IST]
Desktop Bottom Promotion