Latest Updates
-
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
காளானை வைச்சு இந்த தாபா ஸ்டைல் கடாய் மஷ்ரூம் செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும்...!
Kadai Mushroom Recipe in Tamil: சிக்கன், மட்டனுக்குப் பிறகு பெரும்பாலான மக்களுக்கு பிடித்த ஒரு சுவையான உணவென்றால் அது மஷ்ரூம்தான். அசைவ உணவுகளை எப்படியெல்லாம் சமைக்கிறோமோ அத்தனை வழிகளிலும் காளானை சமைக்கலாம். உங்கள் வீட்டில் தோசை அல்லது சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அப்படியெனில் அதற்கு காளான் சிறந்த சைடிஷாக இருக்கும்.
பொதுவாக தாபாக்களில் சப்பாத்திக்கு ஒரு சூப்பர் சைடிஷ் பரிமாறுவார்கள். அதுதான் கடாய் மஷ்ரூம். அந்த கடாய் மஷ்ரூமை வீட்டிலேயே எளிதாக செய்யலாம். இந்த கடாய் மஷ்ரூம் தோசை, சப்பாத்தி மற்றும் பூரியுடன் சேர்த்து சாப்பிட வேற லெவலில் இருக்கும். இது தாபாக்களில் பரிமாறப்படும் கிரேவி போலவே இருக்கும். உங்களுக்கு தாபா ஸ்டைலில் கடாய் மஷ்ரூம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- காளான் - 250 கிராம்
- பெரிய வெங்காயம் - 2
- குடைமிளகாய் - 1
- தக்காளி - 2
- பூண்டு - 6 பல்
- இஞ்சி - ஒரு துண்டு
- உப்பு - தேவையான அளவு
- சர்க்கரை - அரை ஸ்பூன்
- பட்டர் -1 ஸ்பூன்
- கொத்தமல்லி தழை அலங்கரிக்க
வறுத்து அரைக்க:
- வர மிளகாய் -2
- தனியா - 1 டேபிள் ஸ்பூன்
- சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
- சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
- மிளகு - 1 ஸ்பூன்
- கசூரி மேத்தி -1 டேபிள் ஸ்பூன்
- பட்டை - ஒரு துண்டு
- கிராம்பு - 2
- ஏலக்காய் - 2
- பிரியாணி இலை - 1
- ஜாதிபத்திரி - சிறிதளவு
செய்முறை:
- வறுத்து அரைக்க கொடுத்து உள்ள பொருட்களில் கசூரி மேத்தி தவிர மற்ற பொருட்களை வெறும் கடாயில் பொன்னிறமாக வறுக்கவும். அடுப்பை அணைத்து விட்டு அதே சூட்டில் கசூரி மேத்தி சேர்த்து வறுக்கவும்.
- ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் பெரிய வெங்காயம் .பூண்டு ,இஞ்சி போட்டு வதக்கவும்
- இவை வதங்கிய பின் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி ,சிறிது மஞ்சள் ,வறுத்து வைத்து இருக்கும் அனைத்து மசாலாவையும் இதனுடன் போட்டு கலந்து வைக்கவும்.
- இந்த கலவை ஆறிய பின் மிக்ஸியில் நைசாக அரைத்து வைத்து கொள்ளவும். பிரியாணி இலையைத் தவிர அனைத்தையும் அரைக்கவும்.
- கடாயில் ஒரு ஸ்பூன் பட்டர் போட்டு நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம், குடைமிளகாய் இரண்டையும் பாதி வேகும் அளவு வதக்கவும், வதக்கிய பின் அதை எடுத்து தனியாக வைத்து விட்டு ,அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி நைசாக அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு வதக்கவும்.
- எண்ணெய் பிரிந்து வரும் போது நறுக்கி வைத்திருக்கும் மஷ்ரூமை போட்டு வதக்கவும். தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்து கொள்ளலாம். மஷ்ரூம் நன்கு வெந்த பின் உப்பு சரிபார்த்து சேர்க்கவும்.
- பின்னர் அரை ஸ்பூன் சுகர் சேர்க்கலாம். இறுதியாக வதக்கி வைத்து இருக்கும் பெரிய வெங்காயம் குடைமிளகாய் துண்டுகள் சேர்த்து ஒரு 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
- பின் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து அலங்கரிக்கவும்.



Click it and Unblock the Notifications











