Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்..
1 ஸ்பூன் துவரம் பருப்பும், 1 ஸ்பூன் கடலைப்பருப்பும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்
Iru Paruppu Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் இட்லி, தோசை செய்ய போகிறீர்களா? அதற்கு இன்னும் என்ன சட்னி செய்வதென்று முடிவெடுக்கவில்லையா? எப்போதும் ஒரே சுவையில் சட்னி செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், அதுவும் நீங்கள் இதுவரை செய்திராத சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் இரு பருப்பு சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகிய இரண்டையும் கொண்டு செய்யக்கூடியது. இந்த சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னியை செய்தால், வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இரு பருப்பு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இரு பருப்பு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* துவரம் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பச்சை மிளகாய் - 1
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 3 பல்
* புளி - 1 நெல்லிக்காய் அளவு
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து மிதமான
தீயில் வைத்து, லேசாக நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, எண்ணெயை
வடிகட்டிவிட்டு, பருப்புக்களை மட்டும் ஒரு தட்டில் எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு மீதமுள்ள எண்ணெயில் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, நறுக்கிய
வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் புளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பருப்பு கலவையை சேர்த்து நன்கு
அரைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வதக்கி வைத்துள்ள வெங்காய கலவையை சேர்த்து, துருவிய
தேங்காய், சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டு, சிறிது நீரை ஊற்றி
கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்
தூள் மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து
கிளறினால், சுவையான இரு பருப்பு சட்னி தயார்.



Click it and Unblock the Notifications