Latest Updates
-
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும்
மணமணக்கும்.. இறால் கிரேவி.. இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. சாதத்துக்கு சும்மா அள்ளும்...
Iral Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி இறால் எடுப்பீர்களா? எப்போது இறாலை வாங்கினாலும் ஒரே சுவையில் தான் செய்து சாப்பிடுவீர்களா? அதுவும் கிரேவி செய்வதாக இருந்தால் ஒரே ருசியில் தான் இறால் கிரேவி செய்வீர்களா? இப்படி செய்து போரடித்துவிட்டதா?
சற்று வித்தியாசமான சுவையில் இறால் கிரேவி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் ஒருசில பொருட்களை வறுத்து அரைத்து மசாலா செய்து, கிரேவி செய்யுங்கள். இந்த கிரேவி சாதம், சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு இறால் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இறால் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* நெய் - 2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 2
* பட்டை - 1 துண்டு
* கல்பாசி - சிறிய துண்டு
* மிளகு - 1 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* முந்திரி - 15
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* பச்சை மிளகாய் - 1
* பூண்டு - 7 பல் (தட்டிக் கொள்ளவும்)
* இஞ்சி - சிறிய துண்டு (துருவியது)
* சின்ன பெரிய வெங்காயம் - 1 ()
கிரேவிக்கு...
* நல்லெண்ணெய் - 100 மிலி
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 7 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (துருவியது)
* பெரிய தக்காளி - 5 (பொடியாக நறுக்கியது)
* இறால் - 2 கிலோ
* குழம்பு மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, கிராம்பு, பட்டை, கல்பாசி, மிளகு, சீரகம்,
முந்திரி சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் துருவிய இஞ்சியை
சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து இறாலை சுத்தம் செய்து, நீரை முற்றிலும் வடித்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த இறாலுடன் 1 1/2 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்,
அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு பிரட்டி
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும்,
கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, ஏற்கனவே உப்பு
சேர்த்திருப்பதால், சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து வதக்கி, பொடியாக
நறுக்கிய தக்காளியை சேர்த்து, நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்தது நன்கு 3 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி, காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்து
நன்கு கிளறி விட்டு, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி
இறக்கினால், சுவையான இறால் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications
