Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
தோசை மாவு இல்லையா? 10 நிமிஷத்துல இப்படியொரு அடை தோசையை செய்யுங்க.. டேஸ்ட்டா இருக்கும்...
Instant Adai Dosa Recipe In Tamil: காலையில் தோசை சுட உங்கள் வீட்டில் மாவு இல்லையா? என்ன சமைப்பது என்று தெரியவில்லையா? இன்னும் எந்த ஐடியாவும் வரவில்லையா? அப்படியானால் அடை தோசையை செய்யுங்கள். இந்த அடை தோசை மிகவும் சுவையாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.
இந்த இன்ஸ்டன்ட் அடை தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்றவை பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த அடை தோசை வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு அடை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அடை தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 கப்
* கோதுமை மாவி - 1/2 கப்
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - சிறிய துண்டு
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* தயிர் - 1/2 கப்
* தண்ணீர் - 1/2 கப் + 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் ரவை, கோதுமை மாவு ஆகியவற்றை எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயத்தை சேர்க்க
வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய கேரட், சீரகம், சற்று புளித்த தயிர், 1/2
கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை ஊற்றி, அத்துடன் 1/4 கப் நீரை
ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி
சேர்த்து கலந்து, 5 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், சிறிது
எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, மேலே சிறிது
எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான அடை
தோசை தயார்.



Click it and Unblock the Notifications









