Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
இட்லிக்கு இந்த மாதிரி தக்காளி குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க...
Idly Thakkali Kurma Recipe In Tamil: காலையில் இட்லிக்கு எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் சட்னி, சாம்பார் செய்து போரடித்து விட்டதா? இட்லிக்கு வாய்க்கு ருசியான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதே சமயம் வழக்கத்தை விட அதிகமாக வீட்டில் உள்ளோர் சாப்பிட வேண்டுமா?
அப்படியானால் தக்காளி குருமாவை செய்யுங்கள். இந்த தக்காளி குருமாவை செய்தால், காலையில் இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். மேலும் இந்த இட்லி குருமா செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும்.

உங்களுக்கு இட்லி தக்காளி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இட்லி தக்காளி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 2
* அன்னாசிப்பூ - 1
* பிரியாணி இலை - 1
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 3/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - 2 சிறிய துண்டு
* சின்ன வெங்காயம் - 6
* தக்காளி - 2
* தேங்காய் - 1/2 கப்
* ஏலக்காய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, பிரியாணி இலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி மென்மையாகும்
வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து
குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் பூண்டு, இஞ்சி, தக்காளி, சின்ன வெங்காயம்,
தேங்காய், ஏலக்காய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை வாணலியில் வதங்கிக் கொண்டிருக்கும்
பொருட்களுடன் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சுவை
பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, நன்கு பச்சை வாசனை போக
கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான இட்லி
தக்காளி குருமா தயார்.



Click it and Unblock the Notifications











