Latest Updates
-
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்!
ஆடி 18க்கு இந்த பாயசம் செஞ்சு அசத்துங்க..! இதோ ரெசிபி..!
பாயசம் என்பது விருந்துகளிலும் திருநாள்களிலும் பரிமாறும் இனிப்பு உணவு ஆகும். தமிழர் விருந்துகளில் பால் பாயசம் முக்கியமான உணவாகும். அதிலும் திருமணத்தில் பாயாசம் இல்லாமல் இருக்காது.. பேச்சு வழக்கில் பாயசத்தை பாயாசம் என்று சொல்ல ஆரம்பித்த்விட்டனர்.. இதில் பால் பாயசம், பருப்புப் பாயசம், அவல் பாயசம் எனப் பல வகைகள் உண்டு.
பால் பாயசத்தைப் பால், சவ்வரிசி, சேமியா முதலியவற்றைக் கொண்டு செய்கிறார்கள். பொதுவாக இதனுடன் உளுந்து வடையையோ பொடித்த அப்பளத்தையோ சேர்த்து உண்பார்கள். விருந்துகளில் நிறைப்புணவாகப் (Dessert) பரிமாறுவதற்கும், சீக்கிரமாக நாம் சாப்பிட்ட உணவுகள் செரிமானமடையும் மென்றுவிழுங்குவதில் சிரமமுள்ளவர்களுக்கும் நல்ல உணவாக பாயசம் பயன்படுகிறது.

அத்தகைய பாயசத்தை தமிழர்கள் கண்டிப்பாக ஆடி 18ஆம் பெருக்கு விழாவிற்கு செய்வார்கள்.. தற்போது பொரும்பாலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகரித்துவிட்டனர்.. அதனால் அவர்களுக்காகவும் ஏற்ற ஒரு பாயசத்தைதான் நாளை ஆடிப்பெருக்கில் செய்ய போகிறோம்.. அது சாமை பாயசம்தான்..
சாமை அரிசியின் நன்மைகள்
காய்ச்சலினால் ஏற்படும் நாவறட்சியை போக்கும். வயிறு தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும். ஆண்களின் இனப்பெருக்க அணு உற்பத்திக்கும், ஆண்மைக் குறைவை நீக்கும். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டு வர முதன்மை பங்கு வகிக்கும்.
புரத சத்துக்களைக் கொண்ட சாமை பாயசம் செய்ய தேவையான பொருள்கள்:
1. நன்கு அலசி சுத்தம் செய்யப்பட்ட சாமை அரிசி
2. பால்
3. வெல்லம்
4. ஏலக்காய்
5. கேசரி பொடி
6. முந்திரி மற்றும் பாதாம்
7. நெய்
8. திராட்சை
செய்முறை:
1. முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை நன்றாக சுட வைக்கவும்.
2. இப்பொழுது தேவையான கேசரி பொடியை அதில் சேர்க்கவும்.
3. பின்னர் பாலுடன் கேசரிப் பொடி கொதிக்கும் சமயத்தில், கழுவப்பட்ட சாமையை கட்டி ஆகாமல் சிறிது, சிறிதாக சேர்க்கவும்.
4. அதன் பிறகு சாமை நன்றாக வேகும் வரையில் கிண்டவும்.
5. மறுபுறம் ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீருடன் வெல்லத்தை போட்டு நன்றாக கரைத்துப் பாகு செய்யவும்.
6. இப்பொழுது அந்த வெல்லப் பாகை மண் இல்லாத படி வடித்து மேற்கண்ட சாமையில் சிறிது, சிறிதாக சேர்க்கவும்.
7. அதன் பிறகு மேற்கண்டவற்றை நன்கு அடிப்பிடிக்காமல் கிண்டி ஏலக்காய் பொடியை அதில் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
8. இதே சமயத்தில் இன்னொரு வாணலியில் தேவையான அளவு நெய் ஊற்றி முந்திரி, பாதாம், திராட்சை என அனைத்தையும் பொரித்து மேற்கண்டவற்றுடன் சேர்த்து நன்கு கிண்டி அடுப்பில் இருந்து இறக்கவும்.
9. இதோ இப்போது சுவையான சாமை பாயசம் ரெடி.
10. வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி இதனை செய்து கொடுத்து வர தசையை வளர்க்கும். எலும்புகளை உறுதிப்படுத்தும்.



Click it and Unblock the Notifications