Latest Updates
-
செப்டம்பரில் உருவாகும் பல அரிய ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்கு செல்வ செழிப்பை கொண்டு வரும்.. உங்க ராசி என்ன? -
துவரம் பருப்பும், தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரப்போகுதாம் -
செவ்வாயால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிகளின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
ப்ளீச்சிங் செஞ்ச மாதிரி முகம் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
September Matha Rasipalan 2026: செப்டம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
ஆசிரியையின் ஒரு அறை.. உயிரிழந்த சிறுவன்! இது எப்படி சாத்தியம் என்பது குறித்து விளக்கும் டாக்டர்! -
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்..
நீங்கள் வைக்கும் குழம்புக்கு சுவைக்கூட்டும் வெங்காய வடகம் பற்றி தெரியுமா? இதோ ரெசிபி..!
தென் மாவட்டங்களில் அதிகமாக மத்திய சாப்பாட்டிற்கு குழம்பு சாம்பார், காரக்குழம்பு என எது செய்து சாப்பிடுவார்கள்.. அதில் வெங்காய வடகத்தை வறுத்துப் போட்டால் குழம்பு வாசனையிலும் ருசியிலும் செம்மையாக இருக்கும்.. இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதிலும் மீன் குழம்புக்கு அலாதியாக இருக்கும்.. கட்டி இழுக்கும். இந்த ரெசிபியை வீட்டில் செய்ய டிப்ஸ் இதோ...
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 1.5 கப்
பூண்டு பற்கள் - 1/2 கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
உளுந்து - 1/4 கப் ( 30 நிமிடங்கள் ஊற வைக்கவும் )
கடுகு - 1
துவரம்பருப்பு - 1 Tsp
சீரகம் - 1.5 Tsp
வெந்தையம் - 1/2 Tsp
சிவப்பு மிளகாய்ப் பொடி - 1 Tsp
மஞ்சள் - 1 Tsp
உப்பு - தேவைக்கு ஏற்ப
ஆமணக்கு எண்ணெய் - 2 Tsp
சமையல் எண்ணெய்

செய்முறை
1. முதலில் சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் அந்த மூன்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்..
2. அதில் கடுகு , வெந்தையம், துவரம்பருப்பு, சீரகம், உப்பு, சிவப்பு மிளகாய்ப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து கைகளால் நன்குக் கலந்து கொள்ளவும்.
3. அடுத்ததாக ஊற வைத்த உளுத்தம் பருப்பை மிக்ஸியில் மொர மொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
4. அரைத்த அந்த உளுந்தை வெங்காயக் கலவையில் சேர்த்துக் கலந்து கொள்ளவும். தற்போது அந்தக் கலவையை எலுமிச்சைப் பழம் அளவிற்கு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அவற்றை இரவு முழுவதும் அப்படியே உலர்த்தி வைத்து விடுங்கள்..
5. மறுநாள் அந்த உருளை உடைத்து அதில் ஆமணக்கு எண்ணெய் தெளித்து பிரட்டுங்கள். தற்போது மீண்டும் அவற்றை உருளைகளாக உருட்டி வையுங்கள்.
6. இப்படி அதில் நீர் வற்றும் போது சிறிது ஆமணக்கு எண்ணெயை கலந்து உருட்டுங்கள்.. பின்னர் அதனை நன்றாக வெயிலில் உலர வைக்கலாம்.. அல்லது வெயிலுக்கு அருகில் நிழல் உள்ள இடத்தில் ஒரு தட்டில் வைத்து உலர்த்தலாம்..
7. இதற்குக் குறைந்தது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் எடுக்கும். பின் அவை நன்கு உலர்ந்ததும் டப்பாவில் அடைத்து வைத்து தேவைப்படும் போதெல்லாம் குழம்பில் தாளித்துக் கொட்டினால் குழம்பு ருசியாக இருக்கும்.
8. இந்த உருண்டைகளை சில்வர் டப்பாவில் அடைத்து வைப்பது நல்லது..



Click it and Unblock the Notifications