Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
நீங்கள் வைக்கும் குழம்புக்கு சுவைக்கூட்டும் வெங்காய வடகம் பற்றி தெரியுமா? இதோ ரெசிபி..!
தென் மாவட்டங்களில் அதிகமாக மத்திய சாப்பாட்டிற்கு குழம்பு சாம்பார், காரக்குழம்பு என எது செய்து சாப்பிடுவார்கள்.. அதில் வெங்காய வடகத்தை வறுத்துப் போட்டால் குழம்பு வாசனையிலும் ருசியிலும் செம்மையாக இருக்கும்.. இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதிலும் மீன் குழம்புக்கு அலாதியாக இருக்கும்.. கட்டி இழுக்கும். இந்த ரெசிபியை வீட்டில் செய்ய டிப்ஸ் இதோ...
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 1.5 கப்
பூண்டு பற்கள் - 1/2 கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
உளுந்து - 1/4 கப் ( 30 நிமிடங்கள் ஊற வைக்கவும் )
கடுகு - 1
துவரம்பருப்பு - 1 Tsp
சீரகம் - 1.5 Tsp
வெந்தையம் - 1/2 Tsp
சிவப்பு மிளகாய்ப் பொடி - 1 Tsp
மஞ்சள் - 1 Tsp
உப்பு - தேவைக்கு ஏற்ப
ஆமணக்கு எண்ணெய் - 2 Tsp
சமையல் எண்ணெய்

செய்முறை
1. முதலில் சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் அந்த மூன்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்..
2. அதில் கடுகு , வெந்தையம், துவரம்பருப்பு, சீரகம், உப்பு, சிவப்பு மிளகாய்ப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து கைகளால் நன்குக் கலந்து கொள்ளவும்.
3. அடுத்ததாக ஊற வைத்த உளுத்தம் பருப்பை மிக்ஸியில் மொர மொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
4. அரைத்த அந்த உளுந்தை வெங்காயக் கலவையில் சேர்த்துக் கலந்து கொள்ளவும். தற்போது அந்தக் கலவையை எலுமிச்சைப் பழம் அளவிற்கு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அவற்றை இரவு முழுவதும் அப்படியே உலர்த்தி வைத்து விடுங்கள்..
5. மறுநாள் அந்த உருளை உடைத்து அதில் ஆமணக்கு எண்ணெய் தெளித்து பிரட்டுங்கள். தற்போது மீண்டும் அவற்றை உருளைகளாக உருட்டி வையுங்கள்.
6. இப்படி அதில் நீர் வற்றும் போது சிறிது ஆமணக்கு எண்ணெயை கலந்து உருட்டுங்கள்.. பின்னர் அதனை நன்றாக வெயிலில் உலர வைக்கலாம்.. அல்லது வெயிலுக்கு அருகில் நிழல் உள்ள இடத்தில் ஒரு தட்டில் வைத்து உலர்த்தலாம்..
7. இதற்குக் குறைந்தது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் எடுக்கும். பின் அவை நன்கு உலர்ந்ததும் டப்பாவில் அடைத்து வைத்து தேவைப்படும் போதெல்லாம் குழம்பில் தாளித்துக் கொட்டினால் குழம்பு ருசியாக இருக்கும்.
8. இந்த உருண்டைகளை சில்வர் டப்பாவில் அடைத்து வைப்பது நல்லது..



Click it and Unblock the Notifications










