Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
மட்டன் கோலா உருண்டை குழம்பு செய்வது எப்படி?
மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.. அதனால் இந்த சண்டெக்கு இந்த மட்டன் கறி கோலா உருண்டைக் குழம்பை செய்து அசத்துங்கள்..
பெண்களுக்கு இரத்த சோகை கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே கருவுற்ற தாய்மார்கள் மட்டனை சாப்பிட்டால் அதில் உள்ள இரும்பு சத்து ஹீமோ குளோபின் அளவை அதிகரித்து உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்வது என்றும் அதற்கு என்னென்ன? பெருட்கள் தேவைப்படும் என்பது குறித்தும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..

தேவையான பொருள்கள்
1. கொத்திய ஆட்டுக்கறி
2. பெரிய வெங்காயம்
3. மஞ்சள் தூள்
4. சோம்புத் தூள்
5. பொட்டுக்கடலை மாவு
6. முட்டை
7. பச்சை மிளகாய்
8. பூண்டு
9. உப்பு
10. எண்ணெய்
11. பெரிய வெங்காயம்
12. இஞ்சிப் பூண்டு விழுது
13. பெரிய தக்காளி
14. சாம்பார் மிளகாய்த் தூள்
15. எலுமிச்சை சாறு
16. பச்சை மிளகாய்
17. மஞ்சள் தூள்
18. புதினா இலை
19. தேங்காய்ப் பால்
20. கொத்தமல்லி இலை
21. கிராம்பு
22. பட்டை
23. பிரியாணி இலை
24. ஏலக்காய்
செய்முறை:
1. முதலில் உருண்டையை தயார் செய்து கொள்ள, நன்கு கொத்திய ஆட்டுக் கறியை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
2. பச்சை மிளகாயை நீளம், நீளமாக கீறி வைத்துக் கொள்ளவும்.
3. இப்பொழுது வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகிய இவை அனைத்தையும் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
4. அடுத்ததாக ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி காய விடவும்.
5. எண்ணெய் நன்கு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார் மிளகாய்த் தூள், சிட்டிகை மஞ்சள் தூள் என அனைத்தையும் போட்டு கறியில் தண்ணீர் வற்றும் வரையில் வதக்கி எடுத்து ஆற வைக்கவும்.
6. இப்போது நன்கு ஆறிய மாத்திரத்தில் மேற்கண்டவற்றுடன் பொட்டுக்கடலை மாவு, சோம்புத் தூள், மற்றும் முட்டையை உடைத்துச் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து உருண்டை பிடித்து வைத்துக் கொள்ளவும்.
7. பின்னர் ஒரு கனமான வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மேலே பிடித்த உருண்டைகளை அதில் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
8. பின்னர் குழம்புக்கு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்துமல்லித் தழை என அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்..
9. பின் ஒரு வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு பிரியாணி இலை, கிராம்பு, பட்டை, ஏலக்காய் என அனைத்தையும் போட்டு நன்கு தாளித்து இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரையில் நன்கு வதக்கவும்.
10. பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித் தழை என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்கு வதக்கவும். மேற்கண்ட அனைத்தும் நன்கு வதங்கிய பின்னர் தேங்காய்ப் பால் சேர்க்கவும்.
11. இப்போது தேவைப்பட்டால், தேவையான அளவு உப்பை போட்டு நன்கு கொதிக்க விடவும்.
12. குழம்பு நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும், பொறித்து வைத்து உள்ள உருண்டைகளைப் போட்டு மேலும், ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
13. இதோ சுவையான கறி உருண்டைக் குழம்பு தயார்.
குறிப்பு: தேவைப்பட்டால் குழம்பு கூட்டும்போது மட்டன் எலும்புகள் இருந்தால் சேர்த்துக் கொள்ளுங்கள்.. சுவை அலாதியாக இருக்கும்..



Click it and Unblock the Notifications