Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
மட்டன் கோலா உருண்டை குழம்பு செய்வது எப்படி?
மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.. அதனால் இந்த சண்டெக்கு இந்த மட்டன் கறி கோலா உருண்டைக் குழம்பை செய்து அசத்துங்கள்..
பெண்களுக்கு இரத்த சோகை கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே கருவுற்ற தாய்மார்கள் மட்டனை சாப்பிட்டால் அதில் உள்ள இரும்பு சத்து ஹீமோ குளோபின் அளவை அதிகரித்து உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்வது என்றும் அதற்கு என்னென்ன? பெருட்கள் தேவைப்படும் என்பது குறித்தும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..

தேவையான பொருள்கள்
1. கொத்திய ஆட்டுக்கறி
2. பெரிய வெங்காயம்
3. மஞ்சள் தூள்
4. சோம்புத் தூள்
5. பொட்டுக்கடலை மாவு
6. முட்டை
7. பச்சை மிளகாய்
8. பூண்டு
9. உப்பு
10. எண்ணெய்
11. பெரிய வெங்காயம்
12. இஞ்சிப் பூண்டு விழுது
13. பெரிய தக்காளி
14. சாம்பார் மிளகாய்த் தூள்
15. எலுமிச்சை சாறு
16. பச்சை மிளகாய்
17. மஞ்சள் தூள்
18. புதினா இலை
19. தேங்காய்ப் பால்
20. கொத்தமல்லி இலை
21. கிராம்பு
22. பட்டை
23. பிரியாணி இலை
24. ஏலக்காய்
செய்முறை:
1. முதலில் உருண்டையை தயார் செய்து கொள்ள, நன்கு கொத்திய ஆட்டுக் கறியை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
2. பச்சை மிளகாயை நீளம், நீளமாக கீறி வைத்துக் கொள்ளவும்.
3. இப்பொழுது வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகிய இவை அனைத்தையும் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
4. அடுத்ததாக ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி காய விடவும்.
5. எண்ணெய் நன்கு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார் மிளகாய்த் தூள், சிட்டிகை மஞ்சள் தூள் என அனைத்தையும் போட்டு கறியில் தண்ணீர் வற்றும் வரையில் வதக்கி எடுத்து ஆற வைக்கவும்.
6. இப்போது நன்கு ஆறிய மாத்திரத்தில் மேற்கண்டவற்றுடன் பொட்டுக்கடலை மாவு, சோம்புத் தூள், மற்றும் முட்டையை உடைத்துச் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து உருண்டை பிடித்து வைத்துக் கொள்ளவும்.
7. பின்னர் ஒரு கனமான வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மேலே பிடித்த உருண்டைகளை அதில் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
8. பின்னர் குழம்புக்கு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்துமல்லித் தழை என அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்..
9. பின் ஒரு வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு பிரியாணி இலை, கிராம்பு, பட்டை, ஏலக்காய் என அனைத்தையும் போட்டு நன்கு தாளித்து இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரையில் நன்கு வதக்கவும்.
10. பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித் தழை என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்கு வதக்கவும். மேற்கண்ட அனைத்தும் நன்கு வதங்கிய பின்னர் தேங்காய்ப் பால் சேர்க்கவும்.
11. இப்போது தேவைப்பட்டால், தேவையான அளவு உப்பை போட்டு நன்கு கொதிக்க விடவும்.
12. குழம்பு நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும், பொறித்து வைத்து உள்ள உருண்டைகளைப் போட்டு மேலும், ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
13. இதோ சுவையான கறி உருண்டைக் குழம்பு தயார்.
குறிப்பு: தேவைப்பட்டால் குழம்பு கூட்டும்போது மட்டன் எலும்புகள் இருந்தால் சேர்த்துக் கொள்ளுங்கள்.. சுவை அலாதியாக இருக்கும்..



Click it and Unblock the Notifications










