Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
இருமல், சளியை சரிச்செய்யும் நண்டு சூப்.. மழைக்கு இதமாக இருக்கும்.. சண்டே ட்ரை பண்ணுங்கள்..!
மழைக்காலம் தற்போது தொடங்கியுள்ள நிலையில் வீட்டில் குழந்தைகளுக்கு தினமும் சூப் செய்துக் கொடுத்தால் நல்லது. காரணம் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதினால் நோய் தொற்றுகள் அதிகமாக பரவும்.. அதில் குறிப்பாக சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அவதிப்படுவார்கள்..
அதனால் தினமும் ஒரு சூப் செய்துக் கொடுக்கலாம். அதில் சளியை முறிக்கும் இந்த நண்டு சூபை மழைக்காலம் முடியும் வரை வாரம் ஒருமுறையாவது செய்துக் கொடுங்கள்.. நண்டு குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. வாங்க இந்த நண்டு சூப்பை வீட்டிலேயே செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ளலாம்..

தேவையான பொருள்கள்
1. நண்டு
2. தக்காளி
3. பெரிய வெங்காயம்
4. இஞ்சி
5. மிளகு
6. சீரகம்
7. எண்ணெய்
8. பூண்டு
9. பச்சைமிளகாய்
10. பட்டை
11. பிரியாணி இலை
12. கொத்தமல்லி இலை
13. உப்பு
செய்முறை
1. முதலில் நண்டை சுத்தம் செய்து கொள்ளவும்.
2. நண்டின் சதைப்பகுதி வெளியில் வருமாறு தட்டிக் கொள்ளவும்.
3. உடன் இஞ்சி, பூண்டை தட்டிக் கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, பட்டை, பிரியாணி இலை, வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
5. நன்றாக வதங்கியவுடன் அரிசி கழுவிய தண்ணீர் அல்லது தண்ணீர் போதுமான அளவு ஊற்றவும்.
6. தண்ணீர் கொதித்ததும் நண்டு, மஞ்சள் தூள், உப்பு போடவும்.
7. நண்டு நன்கு வெந்ததும் இப்பொழுது மிளகு, சீரகத்தூள் போடவும்.
8. நண்டு ஓடு அடியில் இருக்கும் அதனால் வடிகட்டி விட்டு கொத்தமல்லி இலை தூவி சுடச் சுட பறிமாறவும்.
9. இதோ சுவையான நண்டு சூப் தயார்.



Click it and Unblock the Notifications