Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
இருமல், சளியை சரிச்செய்யும் நண்டு சூப்.. மழைக்கு இதமாக இருக்கும்.. சண்டே ட்ரை பண்ணுங்கள்..!
மழைக்காலம் தற்போது தொடங்கியுள்ள நிலையில் வீட்டில் குழந்தைகளுக்கு தினமும் சூப் செய்துக் கொடுத்தால் நல்லது. காரணம் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதினால் நோய் தொற்றுகள் அதிகமாக பரவும்.. அதில் குறிப்பாக சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அவதிப்படுவார்கள்..
அதனால் தினமும் ஒரு சூப் செய்துக் கொடுக்கலாம். அதில் சளியை முறிக்கும் இந்த நண்டு சூபை மழைக்காலம் முடியும் வரை வாரம் ஒருமுறையாவது செய்துக் கொடுங்கள்.. நண்டு குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. வாங்க இந்த நண்டு சூப்பை வீட்டிலேயே செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ளலாம்..

தேவையான பொருள்கள்
1. நண்டு
2. தக்காளி
3. பெரிய வெங்காயம்
4. இஞ்சி
5. மிளகு
6. சீரகம்
7. எண்ணெய்
8. பூண்டு
9. பச்சைமிளகாய்
10. பட்டை
11. பிரியாணி இலை
12. கொத்தமல்லி இலை
13. உப்பு
செய்முறை
1. முதலில் நண்டை சுத்தம் செய்து கொள்ளவும்.
2. நண்டின் சதைப்பகுதி வெளியில் வருமாறு தட்டிக் கொள்ளவும்.
3. உடன் இஞ்சி, பூண்டை தட்டிக் கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, பட்டை, பிரியாணி இலை, வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
5. நன்றாக வதங்கியவுடன் அரிசி கழுவிய தண்ணீர் அல்லது தண்ணீர் போதுமான அளவு ஊற்றவும்.
6. தண்ணீர் கொதித்ததும் நண்டு, மஞ்சள் தூள், உப்பு போடவும்.
7. நண்டு நன்கு வெந்ததும் இப்பொழுது மிளகு, சீரகத்தூள் போடவும்.
8. நண்டு ஓடு அடியில் இருக்கும் அதனால் வடிகட்டி விட்டு கொத்தமல்லி இலை தூவி சுடச் சுட பறிமாறவும்.
9. இதோ சுவையான நண்டு சூப் தயார்.



Click it and Unblock the Notifications