Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
பூப்படையும் பெண் குழந்தைகளுக்கு தேவையான எள்ளு சாதம்.. வாரம் ஒருமுறை செஞ்சு கொடுங்க.. வலிமையாக இருப்பார்கள்...!
எள் சாதம் சாப்பிட்டு இருக்கீங்களா? கன்னி பெண்கள் எள் சாதம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.. அதிலும் மாதவிடாய் காலங்களில் எள் சாதம் சாப்பிட்டால் மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கும். அந்த நேரங்களில் ஏற்படும் இடுப்பு வலி, கை , கால் வலிகள் நீங்கும்..
கிராமங்களில் இன்றும் மாதவிடாய் நேரத்தில் சிறுமிகளுக்கு எள் எண்ணெய்யை பச்சையாக அப்படியே குடிக்க கொடுப்பார்கள்.. காரணம் அது பெண் குழந்தைகளுக்கு இடுப்புக்கு வழுவை கொடுக்கும்.. அந்த எள் சாதத்தை வீட்டில் செய்வது எப்படி என்பது குறித்து இந்த பதவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

எள்ளின் நன்மைகள்
எள் ஒரு மருத்துவ மூலிகை. எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று வகைகள் உள்ளன. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் சிறிய செடி வகையாகும். எள் விதைகளில் இருந்து பிழிந்து எள்நெய் பெறப்படுகிறது. எள்நெய் என்பதே எண்ணெய் எனப்படுவது, ஆனால் பொதுவாக இதை நல்லெண்ணெய் என்று அழைப்பர்.
எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. எள் வறண்ட பகுதியிலும் வளரக் கூடியது. இதைப் பயிரிடும்போது ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சியைச் தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது.
தேவையான பொருள்கள்
1. எள்
2. உளுத்தம் பருப்பு
3. காய்ந்த மிளகாய்
4. உப்பு
5. பெருங்காயம்
செய்முறை
1. முதலில் எண்ணெய்யை ஊற்றாமல் வாணலியில் எள்ளை மட்டும் நன்கு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்..
2. பிறகு அதே வாணலியை பயன்படுத்தி எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் இவற்றை எல்லாம் தீய விடாமல் நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்..
3. பின்னர் இந்த அனைத்து சாமான்களையும் மிக்சியில் வைத்து உடன் உப்பு சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
4. பின்னர் இதனுடன் சேர்த்து முன்பு வறுத்த எள்ளையும் வைத்து நன்றாகக் பொடியாக்கி அரைத்து வைத்துக் கொள்ளவும்.
5. இப்போது இந்தப் பொடியை தான் எள் சாதம் செய்ய பயன்படுத்த இருக்கிறோம்.
கறுப்பு எள் அதிக மருத்துவப் பண்புகள் கொண்டது. இதில் அதிகளவு சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளது.



Click it and Unblock the Notifications











