Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
ஒருவாட்டி தேங்காய் சட்னியை இந்த மாதிரி செஞ்சு பாருங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Green Coconut Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் இட்லி அல்லது தோசை தான் டிபனாக இருக்குமா? அவற்றிற்கு எப்போதும் உங்கள் வீட்டில் அடிக்கடி தேங்காய் சட்னி செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் தேங்காய் சட்னியை செய்வீர்களா? சில சமயங்களில் உங்களின் தேங்காய் சுவையின்றி இருக்குமா?
அப்படியானால் அடுத்தமுறை தேங்காய் சட்னி செய்வதாக இருந்தால், அதன் சுவை இன்னும் பிரமாதமாக இருக்க, அவற்றுடன் 2 பொருட்களை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அது தான் கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை. இவ்விரண்டும் சத்தானது மட்டுன்றி, சட்னிக்கு பச்சை நிறத்துடன், நல்ல சுவையையும் தரக்கூடியவை.

முக்கியமாக இப்படி தேங்காய் சட்னி செய்யும் போது, வீட்டில் உள்ளவர்கள் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். அதுவும் இந்த சட்னியை தொட்டு சாப்பிடாமல், ஊற்றி ஊற வைத்து பிசைந்து சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு இந்த க்ரீன் தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே க்ரீன் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் - 1 கப்
* பொட்டுக்கடலை - 1/2 கப்
* பச்சை மிளகாய் - 3
* சின்ன வெங்காயம் - 3
* பூண்டு - 2 பல்
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* புளி - 1 சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காயை ஒரு கப் எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் 1/2 கப் பொட்டுக்கடலை, 3 பச்சை மிளகாய், 3 சின்ன
வெங்காயம், 2 பல் பூண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை சிறிது சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் புளி ஒரு சிறிய துண்டு சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, சற்று
தாராளமாக நீரை ஊற்றி, தண்ணி சட்னி போல் கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு 2
டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 1/2 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு, 1 வரமிளகாய் மற்றும் 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான க்ரீன் தேங்காய்
சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











