Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
மீந்து போன சப்பாத்தி இருந்தா.. முட்டை சேர்த்து இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. நொடியில் காலியாயிடும்...
Egg Kothu Chapathi Recipe In Tamil: உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்து மீந்து போய்விட்டதா? அப்படி மீந்து போன சப்பாத்தியை தூக்கி போட மனமில்லையா? அதைக் கொண்டு ஒரு சுவையான ரெசிபியை செய்ய நினைத்தால் முட்டை கொத்து சப்பாத்தியை செய்து சாப்பிடுங்கள். இப்படி சப்பாத்தியை செய்யும் போது, அதற்கு சைடு டிஷ் எதுவும் தேவைப்படாது.
மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். உங்கள் பிள்ளைகள் ஸ்பெஷலாக ஏதாவது செய்து கொடுக்குமாறு கேட்டால், சப்பாத்தியை செய்து, முட்டை சேர்த்து இப்படி முட்டை கொத்து சப்பாத்தியை செய்யுங்கள். இந்த முட்டை கொத்து சப்பாத்தி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு முட்டை கொத்து சப்பாத்தியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை கொத்து சப்பாத்தி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீந்து போன சப்பாத்தி - 3
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புதினா - சிறிது
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1.2 டீஸ்பூன்
* கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
* ஏதாவது குழம்பு/குருமா - 1 கப்
* முட்டை - 4
செய்முறை:
* முதலில் சப்பாத்தியை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும்
புதினாவை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலாவை சேர்த்து வதக்க
வேண்டும்.
* பிறகு துண்டுகளாக்கி வைத்துள்ள சப்பாத்தியை சேர்த்து 3-4 நிமிடம்
நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் வீட்டில் செய்து வைத்துள்ள எந்த குழம்பு அல்லது
குருமாவாக இருந்தாலும், அதை ஒரு கப் ஊற்றி நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறி விட்டு
இறக்கினால், சுவையான முட்டை கொத்து சப்பாத்தி தயார்.



Click it and Unblock the Notifications





