Latest Updates
-
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
10 நிமிசத்துல பருப்பே இல்லாம் இட்லி, தோசைக்கு ஈஸியான சாம்பாரை செய்யணுமா? இந்த மாதிரி செஞ்சு பாருங்க
Easy Sambar Recipe in Tamil: காலையில் இட்லி, தோசைக்கு சட்னி செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் இன்று சாம்பார் செய்யுங்கள். அதுவும் பருப்பே இல்லாத வித்தியாசமான சாம்பார் செய்யுங்கள். இந்த பருப்பு இல்லாத சாம்பார் இட்லி, தோசை, சாதம் என அனைத்துடனும் பொருத்தமாக இருக்கும். முக்கியமாக இந்த சாம்பார் செய்வதற்கு 10 நிமிடம் போதும்.

மேலும் இந்த சாம்பார் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த ஈஸியான சாம்பார் வைக்க ஒரு ஸ்பெஷல் விழுதை அரைத்தால் போதும். இந்த வித்தியாசமான சாம்பாரை டக்குனு குக்கரிலேயே செய்து விடலாம்.
உங்களுக்கு வித்தியாசமான பருப்பு இல்லாத சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இந்த ஈஸியான சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- நறுக்கியவெங்காயம் - 1/2 கப்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
- கடுகு - 1/2 ஸ்பூன்
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
அரைக்க:
- தேங்காய் - 1/4 கப் துருவியது
- நறுக்கிய தக்காளி - 1
- பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
- வர மிளகாய் - 1
- தனியாத் தூள் - 2 ஸ்பூன்
- பட்டை - ஒரு சிறிய துண்டு
- கிராம்பு - 2
- சோம்பு - 1/2 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- கசகசா - 1/4 ஸ்பூன்
- இஞ்சி - ஒரு சிறிய துண்டு
- பூண்டு - 3 பல்
செய்முறை:
- முதலில் மிக்சி ஜாரில் அரைக்க வேண்டிய பொருட்களில் தக்காளி தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
- பிறகு தக்காளியைச் சேர்த்து நைசாக அரைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்துத் தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்னர் அரைத்த தேங்காய் விழுது மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
- பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
- தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- இறுதியாக கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் சாம்பார் ரெடி. சூடான இட்லி, தோசையுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications