Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
10 நிமிசத்தில் செய்யக்கூடிய புளி இல்லாத புளிக்குழம்பு ரெசிபி... சட்டுனு மதிய உணவுக்கு செஞ்சு பாருங்க...!
Easy Puli Kulambu Recipe in Tamil: தினமும் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான இல்லத்தரசிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாகும். பொதுவாக சாம்பார், குருமா அல்லது புளிக்குழம்பு போன்றவைதான் வாரம் முழுவதும் பெரும்பாலான வீடுகளில் மதிய உணவாக இருக்கிறது. ஆனால் எவ்வளவு நாள்தான் இந்த 3 குழம்பையே செய்து கொண்டிருப்பது.
இதற்கு மாற்றாக வேறு சில குழம்பு வகைகளை வைக்கலாம். அதில் ஒன்றுதான் புளி இல்லாத புளிக்குழம்பு. இந்த குழம்பு சுவையில் வத்தக் குழம்பு போல இருக்கும்ம் ஆனால் இதில் நாம் புளி சேர்க்கப் போவதில்லை. சில நிமிடங்களில் செய்து விடக்கூடிய இந்த குழம்பை மதிய உணவிற்கு மிகவும் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த பதிவில் இந்த அட்டகாசமான குழம்பை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- சின்ன வெங்காயம் - 10
- தக்காளி - 2
- பூண்டு - 3 பல்
அரைக்க:
- சாம்பார் பொடி - 1 1/2 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 2
- சீரகம் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- கடுகு - 1/2 ஸ்பூன்
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- பெருங்காயம் - 1/4 சிட்டிகை
- எண்ணெய் - 3 தேக்கரண்டி
- நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை:
- வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பூண்டை நசுக்கி வைத்துக்கொள்ளவும்.
- தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸி ஜாரில் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- இரண்டரை கப் தண்ணீரில் அரைத்த விழுதை நன்கு கரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும், கடுகு பொரிந்ததும் அதில் உளுந்தம்பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்
- அதன்பின் நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் அதில் சாம்பார் தூளை சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- தக்காளி குலையும் அளவிற்கு வெந்ததும், கரைத்து வைத்திருக்கும் கலவையை ஊற்றிக் கொதிக்க விடவும்.
- குழம்பு நன்கு கொதித்ததும் அதில் நசுக்கிய பூண்டைப் போடவும், குழம்பு நன்கு கொதித்ததும் பெருங்காயம் மற்றும் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சூப்பரான புளிக்குழம்பு ரெடி.
- சாதத்துக்கு இந்த குழம்பு மிகவும் சூப்பராக இருக்கும். அப்பளத்துடன் சேர்த்து சாப்பிடும்போது சுவை வேற லெவலில் இருக்கும்.



Click it and Unblock the Notifications