Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
மாவு எதுவும் அரைக்காம 10 நிமிடத்தில் தீபாவளிக்கு சூப்பர் பலகாரம் செய்யணுமா? அப்ப இத பண்ணுங்க..
Diwali Special Ribbon Pakoda Recipe In Tamil: தீபாவளிக்கு உங்கள் வீட்டில் பலவிதமான பலகாரங்களை செய்யும் வழக்கம் உள்ளதா? அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோர் கார பலகாரங்களை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்களா? இதனால் முறுக்கு, சீவல், ரிப்பன் பக்கோடா என்று பலவற்றை செய்வீர்களா?
பொதுவாக இப்படியான பலகாரங்களுக்கு மாவை அரைத்து தான் நிறைய பேர் செய்வார்கள். ஆனால் மாவு எதுவும் அரைக்காமல் 10 நிமிடத்தில் அற்புதமான சுவையில் ரிப்பன் பக்கோடாவை செய்யலாம் என்பது தெரியுமா? இதை தெரிந்து வைத்துக் கொண்டால், தீபாவளிக்கு சிரமப்படாமல் பலகாரத்தை செய்யலாம்.

உங்களுக்கு ரிப்பன் பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரிப்பன் பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அரிசி மாவு - 300 கிராம்
* பொட்டுக்கடலை - 100 கிராம்
* பூண்டு - 3 பல்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* எள்ளு - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சூடான எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரிசி மாவை
சேர்த்து, மிதமான தீயில் வைத்து 10-12 நிமிடம் வறுத்து இறக்கி குளிர
வைத்து, சல்லடையில் சலித்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலையை சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்து, அதையும் அரிசி மாவில் சல்லடையில் சலித்து சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் பூண்டு பற்கள், மிளகாய் தூள் சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை மாவில் வடிகட்டி பயன்படுத்தி வடிகட்டிக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதில் எள்ளு விதைகள், உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து
ஒருமுறை கைகளால் கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் சூடான எண்ணெயை ஊற்றி கரண்டியால் சிறிது நேரம் கிளறி
விட வேண்டும்.
* எண்ணெயின் சூடு குறைந்ததும், கைகளால் நன்கு பிசைந்து கிளற
வேண்டும்.
* அடுத்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, சப்பாத்தி மாவு
பதத்திற்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். முக்கியமாக மாவு
மிகவும் இறுக்கமாக இருக்கக்கூடாது.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், முறுக்கு உழக்கை எடுத்து, அதில் ரிப்பன் பக்கோடா
அச்சை வைத்து, பிசைந்த மாவை வைத்து, எண்ணெயில் நேரடியாக பிழிந்து விட
வேண்டும். மிதமான தீயில் வைத்து, ரிப்பன் பக்கோடாவை முன்னும் பின்னும்
திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால், ரிப்பன் பக்கோடா தயார்.



Click it and Unblock the Notifications











