Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
தீபாவளி அன்று குலையாம குக்கரில் மட்டன் பிரியாணி செய்யணுமா? இந்த 3 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க போதும்..
Diwali Special Mutton Biryani In Tamil: தீபாவளி பண்டிகையை அனைவரும் கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருப்பீர்கள். மதியம் உங்கள் வீட்டில் மட்டன் வாங்கியிருந்தால், அந்த மட்டனைக் கொண்டு 1/2 மணிநேரத்தில் அருமையான மட்டன் பிரியாணியை செய்யுங்கள். அதுவும் குக்கரிலேயே குலையாத மட்டன் பிரியாணியை செய்யலாம். அதற்கு ஒருசில டிப்ஸ்களை மனதில் கொண்டு செய்தாலே போதும். பிரியாணி குலையாமல் அருமையாக வரும்.
உங்களுக்கு குலையாமல் குக்கரில் மட்டன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குக்கர் மட்டன் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* சீரக சம்பா அரிசி - 2 டம்ளர் அல்லது 1/2 கிலோ
* மட்டன் - 500 கிராம்
மசாலா அரைப்பதற்கு...
* பட்டை - 3 துண்டு
* கிராம்பு - 5-6
* கல்பாசி - சிறிது
* ஏலக்காய் - 5
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மல்லி - 2 டீஸ்பூன்
* பூண்டு - 1 கைப்பிடி
* இஞ்சி - 2 இன்ச்
* சின்ன வெங்காயம் - 15
* பச்சை மிளகாய் - 3
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* புதினா - 1 கைப்பிடி
பிரியாணிக்கு...
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 4
* அன்னாசிப்பூ - 1
* பிரியாணி இலை - 2
* கல்பாசி - சிறிது
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் (காரத்திற்கு ஏற்ப)
* தண்ணீர் - 1/2 கப் + 4 கப்
* எலுமிச்சை - பாதி பழம்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* புதினா - 1 கைப்பிடி
செய்முறை:
* முதலில் சீரக சம்பா அரிசியை நீரில் 2 முறை கழுவி விட்டு, பின்
நீரை ஊற்றி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் மட்டனை கழுவி விட்டு
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் பிரியாணிக்கு ஸ்பெஷல் மசாலாவை அரைக்க வேண்டும். அதற்கு
மிக்சர் ஜாரில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, சோம்பு, மல்லி,
ஆகியவற்றை சேர்த்து முதலில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய்,
கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை சேர்த்து, நீர் விடாமல் நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ,, பிரியாணி இலை,
கல்பாசி சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அதன் பச்சை
வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து, அத்துடன்
மஞ்சள் தூளையும் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின் தயிர் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* அதன் பின் அதில் 1/2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி மிதமான
தீயில் வைத்து 5-6 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத்
திறந்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் ஒரு 2 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க
வைக்க வேண்டும்.
* நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரிசியை கழுவி சேர்த்து, உப்பு
சுவை பார்த்து வேணடுமானால் தேவையான அளவு உப்பையும் சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறி, குக்கரை மூடி உடனே
விசில் போடாமல், 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
* பின் குக்கர் மூடியைத் திறந்து, நன்கு கிளறி விட்டு, பின் அதில் 1
டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, கொத்தமல்லி மற்றும் புதினாவைத் தூவி,
குக்கரை மூடி குறைவான தீயில் வைத்து, விசில் போட்டு 10 நிமிடம் வேக
வைத்து இறக்கி, 10 நிமிடம் கழித்து குக்கரைத் திறந்தால், சுவையான
மட்டன் பிரியாணி தயார்.
குறிப்பு: 1 கப் சீரக சம்பா அரிசிக்கு 2 கப் நீர் ஊற்ற வேண்டும். எனவே இதை நினைவில் கொண்டு, அதற்கேற்ப பிரியாணிக்கு நீரை ஊற்றுங்கள்.



Click it and Unblock the Notifications





