Latest Updates
-
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க..
சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்... தாபா ஸ்டைல் பச்சை பயறு தால்
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி, நாண் அல்லது புல்கா செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் பச்சை பயறு உள்ளதா? அப்படியானால் அந்த பச்சை பயறை கொண்டு தாபா ஸ்டைல் பச்சை பயறு தால் செய்யுங்கள். இந்த தால் மிகவும் ருசியாக இருக்கும். மேலும் இது பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.
இந்த ரெசிபியில் புரோட்டின் அதிகம் இருப்பதால், இது ஆரோக்கியமான ரெசிபியும் கூட. உங்களுக்கு தாபா ஸ்டைல் பச்சை பயறு தால் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தாபா ஸ்டைல் பச்சை பயறு மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* பச்சை பயறு - 1 கப்
* இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (கீறியது)
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
செய்முறை:
* முதலில் பாசி பயறை 3 கப் நீரில் குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி தானதும், இஞ்சி,
தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் ஊற வைத்துள்ள பச்சை பயறை சேர்த்து, மஞ்சள் தூள், கரம்
மசாலா, சுவைக்கேற்ப உப்பு தூவி, தேவையான அளவு நீரை ஊற்றி, குக்கரை
மூடி வைத்து, 3-4 விசில் விட வேண்டும்.
* பிறகு மிதமான தீயில் வைத்து, மீண்டும் 10 நிமிடம் பயறை வேக வைத்து
இறக்க வேண்டும். விசில் போனதும், குக்கரைத் திறக்க வேண்டும்.
* பின் அதில் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லியைத் தூவ
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், சீரகம் மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து, குக்கரில்
உள்ள தால் உடன் சேர்த்து கிளறினால், சுவையான தாபா ஸ்டைல் பச்சை பயறு
தால் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications