Latest Updates
-
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்..
கறிவேப்பிலையை இப்படி சட்னி அரைச்சு சாப்பிட்டா முடியும் வளரும், எடையும் குறையுமாம்...எப்படி செய்யணும் தெரியுமா?
Curry Leaves Chutney Recipe in Tamil: பெரும்பாலான தென்னிந்திய சமையலில் முதலில் போடப்படுவதும் சாப்பிடும்போது தூக்கி எறியப்படுவதும் கறிவேப்பிலைதான். பொதுவாக கறிவேப்பிலையை நாம் முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் பொருள் மட்டுமே என்று நினைக்கிறோம், ஆனால் உண்மையில் கறிவேப்பிலை பல சத்துக்கள் நிறைந்த மூலிகையாகும். கறிவேப்பிலையின் மற்றொரு முக்கிய நன்மை அது எடையை வேகமாக குறைக்க உதவும்.
ஆனால் பெரும்பாலான மக்கள் சாப்பிட அமர்ந்தவுடன் செய்யும் முதல் காரியம் கறிவேப்பிலையை தூக்கியெறிவதுதான். இதனால் நாம் நம் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களை இழக்கிறோம். இதைத் தவிர்க்க கறிவேப்பிலையை சுவையான சட்னியாக அரைத்து சாப்பிடுவது சிறந்த தீர்வாக இருக்கும்.

இந்த ஆரோக்கியமான மற்றும் சுவையான கறிவேப்பிலை சட்னி சாதத்துடன் பிணைந்து சாப்பிடுவதற்கும், இட்லி மற்றும் தோசை போன்ற டிபன் வகைகளுக்கும் சிறந்த சைடிஷாக இருக்கும். இந்த பதிவில் சுவையான கறிவேப்பிலை சட்னியை எப்படி அரைக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் கறிவேப்பிலை
- 2 ஸ்பூன் உளுந்தம்பருப்பு
- ஸ்பூன் கடலைப்பருப்பு
- 4 வரமிளகாய்
- புளி சிறிதளவு
- 2 ஸ்பூன் எண்ணெய்
- அரை கப் தேங்காய்
- பெருங்காயம் சிறிதளவு
- தண்ணீர் தேவையான அளவு
தாளிக்க:
- அரை ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
செய்முறை:
- கறிவேப்பிலையை நன்கு கழுவி விட்டு ஒரு துணியில் நன்கு பரப்பி காய
வைத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடலைப்பருப்பு,
உளுந்தம்பருப்பு சேர்த்து 1 நிமிடம் வறுக்கவும். பின்னர்
பெருங்காயத்தை சேர்க்கவும்.
- பருப்பு வெளிர் பொன்னிறமாக மாறியதும், வரமிளகாயைச் சேர்த்து, இரண்டு
பருப்பும் நன்கு பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும், மிளகாய் மிருதுவாக
மாறும்வரை வதக்க வேண்டும்.
- அடுப்பை அணைத்து விட்டு கறிவேப்பிலை மற்றும் புளி சேர்க்கவும்.
கறிவேப்பிலை கடாயின் சூட்டில் சுருங்கும், இந்த கலவையை நன்கு
ஆறவிடவும்.
- கலவை குளிர்ந்த பிறகு, கலவையை மிக்சர் ஜாடிக்கு மாற்றவும்.
- தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- தண்ணீர் சேர்க்காமல் கரடு முரடாக அரைக்கவும்.
- பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைக்கவும்.
- சட்னியை அரைத்ததும், ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி
அதில் கடுகை போட்டு தாளிக்கவும்.
- பின்னர் இந்த தாளிப்பை சட்னி மீது ஊற்றவும். பின்னர் இதை நன்கு
கலந்தால் சுவையான கறிவேப்பிலை சட்னி ரெடி.
- இதை சாதம், இட்லி மற்றும் தோசையுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக
இருக்கும்.



Click it and Unblock the Notifications

