Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
டயட்டில் இருப்போருக்கான... நோ ஆயில்.. க்ரீமி பன்னீர் கிரேவி... எப்படி செய்றது-ன்னு பாருங்க...
No Oil Creamy Paneer Gravy Recipe In Tamil: உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருப்பவர்கள் தங்கள் உணவில் புரோட்டீனை அதிகம் சேர்ப்பார்கள். அதுவும் பன்னீரை அதிகம் சேர்ப்பார்கள். அதோடு தங்களின் உணவில் எண்ணெயை சேர்ப்பதைத் தவிர்ப்பார்கள். இப்படி எண்ணெய் சேர்க்காமல் சமைப்பது என்று சவாலாக இருக்கலாம். சிலருக்கு எண்ணெய் சேர்க்காமல் எப்படி சமைப்பது என்ற கேள்வியும் எழலாம்.
ஆனால் பன்னீரைக் கொண்டு அருமையான சுவையில் கிரேவி செய்யலாம். அதுவும் க்ரீமியான பன்னீர் கிரேவியை செய்யலாம். இந்த பன்னீர் கிரேவி சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவியில் எண்ணெய் மட்டுமின்றி, வெங்காயம், பூண்டு என்று எதுவுமே சேர்க்க வேண்டாம். எதுவும் சேர்க்காமலேயே அருமையான சுவையில் கிரேவி செய்யலாம்.

உங்களுக்கு எண்ணெய் சேர்க்காமல் பன்னீர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே எண்ணெய் சேர்க்காத பன்னீர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கனிந்த தக்காளி - 2 (நறுக்கியது)
* முந்திரி - 1 கையளவு
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 3/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* காய்ச்சிய பால் - 1/2 கப்
* பன்னீர் - 150 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* கசூரி மெத்தி - சிறிது
செய்முறை:
* முதலில் 1 கையளவு முந்திரியை நீரில் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் நறுக்கிய 2 தக்காளி மற்றும் ஊற வைத்த
முந்திரியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்ததை ஊற்றி, பச்சை
வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில்1 டீஸ்பூன் மிளகாய் தூள், 3/4 டீஸ்பூன் மல்லித்
தூள், 1 டீஸ்பூன் கரம் மசாலா மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு
பச்சை வாசனை போக வதக்க வேண்டும். இதற்கு சற்று நேரம் எடுக்கும்,
இருந்தாலும், குறைவான தீயில் வைத்து நன்கு பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் காய்ச்சிய பாலை 1/2 கப் ஊற்றி கிளறி கொதி வந்ததும்,
பன்னீர் துண்டுகளை சேர்த்து 3-4 நிமிடம் வேக வைத்து, கசூரி மெத்தியை
மேலே தூவி கிளறி இறக்கினால், சுவையான க்ரீமி பன்னீர் கிரேவி
தயார்.



Click it and Unblock the Notifications