Latest Updates
-
1000 ஆண்டுகளுக்கும் மேலாக அணையாமல் எரியும் இந்தியாவின் மர்மமான கோவில் தீபம் - எந்த ஊரில் இருக்கு தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்..
1/2 கப் பொட்டுக்கடலையும், 1 கப் இட்லி மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணிப் பாருங்க..
Coconut Susiyam Recipe In Tamil: மாலை வேளையில் ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு பசியுடன் குழந்தைகள் வருவார்கள். அப்போது குழந்தைகளின் பசியை போக்கும் வகையில் ஒரு அருமையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? வீட்டில் 1/2 கப் பொட்டுக்கடலையும், 1 கப் இட்லி மாவும் இருந்தால், ருசியான தேங்காய் சுசியத்தை செய்யுங்கள்.
இந்த தேங்காய் சுசியம் ஒரு சிறந்த மாலை நேர மற்றும் பசியை ஆற்றும் ஸ்நாக்ஸாக இருக்கும். முக்கியமாக இந்த சுசியம் வழக்கமாக செய்யும் சுசியத்தை விட செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு தேங்காய் சுசியத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் சுசியம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பொட்டுக்கடலை - 1/2 கப்
* நெய் - 1/2 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/2 மூடி
* வெல்லம் - 1 1/2 கப்
* தண்ணீர் - 1/4 கப்
மேல் மாவிற்கு...
* இட்லி மாவு - 1 கப்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலையை போட்டு நன்கு அரைத்து
பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் வெல்லத்தை பொடித்து சேர்த்து,
அதில் 1/4 கப் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும், அதை
வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் நெய்
சேர்த்து உருகியதும், துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடித்த பொட்டுக்கடலை பொடியை சேர்த்து நல்ல மணம்
வரும் வரை வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்ல நீரை சேர்த்து நன்கு கிளறி
விட வேண்டும்.
* கலவையானது நன்கு திரண்டு வந்ததும், அதை இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, ஒரு தட்டில் வைத்துக்
கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு கிண்ணத்தில் 1 கப் இட்லி மாவை எடுத்து, அதில் 2 டேபிள்
ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள உருண்டையை எடுத்து,
மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்துக்
கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் மாவில் பிரட்டி,
எண்ணெயில் பொரித்து எடுத்தால், சுவையான தேங்காய் சுசியம் தயார்.



Click it and Unblock the Notifications