தேங்காய்ப்பாலை வைச்சு இந்த இனிப்பை செஞ்சு பாருங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...!

Posted By:

Coconut Milk Kunukku Recipe in Tamil: தேங்காய் பால் உடலுக்கு ஏக்கப்பட்ட நன்மை தரக் கூடியது. இதை தாய்ப்பாலுடன் கூட ஒப்பிடக் கூடிய அற்புதமான குணங்களை கொண்டிருக்கிறது. தேங்காய்ப்பால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு, ஏராளமான குளிர்கால சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக இருக்க கூடிய ஒரு அற்புத பொருளாகும்.

இது கேரளா பெண்களை போன்று அடர்ந்த கருமையான கூந்தலை கொடுக்கும் பண்புகளை கொண்டிருக்கிறது. ஆனால் தினமும் வெறும் தேங்காய் பால் மட்டும் சாப்பிட்டால் அது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கலாம் மற்றும் நாளடைவில் சலிப்பைக் கூட ஏற்படுத்தும். இதை தவிர்க்க தேங்காய் பால் வைத்து சுவையாக செய்ய கூடிய இந்த தேங்காய் பால் குணுக்கை முயற்சி செய்து பாருங்கள்!

Coconut Milk Kunukku Recipe How to Prepare Coconut Milk Kunukku

தேவையான பொருட்கள்:

- உளுந்து - 1 கப்
- அரிசி - ½ கப்
- ஏலக்காய் - 2
- தேங்காய் - 1
- உப்பு - ¼ ஸ்பூன்
- வெல்லம் - 1 கப்
- எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
- முந்திரி - 10
- பாதாம் - 10
- பிஸ்தா - 10
- உலர் திராட்சை - 10
- உலர் திராட்சை கருப்பு - 10

செய்முறை:

- உளுந்து மற்றும் அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊறவிடவும்.

- பின் இரண்டு மூன்று முறை தண்ணீர் சேர்த்து நன்றாக அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.
- தண்ணீர் இல்லாமல் நன்றாக வடித்து மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளவும்.

- அதனுடன் உப்பு சேர்த்து மிதமான அளவில் தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

- பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய விடவும்.

- பின் அதில் அரைத்து வைத்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

- தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எடுத்து கொள்ளவும்.
- மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காயை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
பின் தண்ணீர் சேர்த்து அரைத்தால் தேங்காய் பால் நன்றாக வரும்.

- அதை சுத்தமான வெள்ளை துணியில் நன்றாக வடித்து எடுத்து கொள்ளவும். அதனுடன் வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

- உங்கள் சுவைக்கு ஏற்ப வெல்லத்தை கூட்டி குறைத்து கொள்ளலாம். பின் பொரித்து வைத்த உருண்டைகளை தேங்காய் பாலில் சேர்த்து நன்றாக ஊற விடவும்.

- உலர் திராட்சைகளை தண்ணீர் நன்றாக அலசி 5 மணி நேரம் ஊற வைக்கவும். பின் தண்ணீரை வடித்துவிட்டு திராட்சைகளை தேங்காய் பாலில் சேர்க்கவும்.

- முந்திரி, பாதாம் மற்றும் பிஸ்தாவை பொடியாக நறுக்கி தேங்காய் பாலில் சேர்க்கவும்.

- உலர் திராட்சை மற்றும் பிஸ்தாவின் நிறம் குழந்தைகளை ஈர்க்கும்.

- நீங்கள் வேண்டுமென்றால் இவற்றை தவிர்த்து விட்டு கூட செய்து கொள்ளலாம்.

- இதை குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்னாக்ஸ் அல்லது இரவு உணவாக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

[ of 5 - Users]
Story first published: Monday, March 10, 2025, 17:22 [IST]
Desktop Bottom Promotion