Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
தேங்காய் சட்னியை ஒருமுறை இந்த பக்குவத்துல செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா தாறுமாறா இருக்கும்...
Coconut Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி அல்லது தோசை தான் காலை டிபனாக இருக்குமா? அதுவும் இதற்கு அடிக்கடி தேங்காய் சட்னியைத் தான் சைடு டிஷ்ஷாக செய்வீர்களா? எப்போதும் தேங்காய் சட்னியை ஒரே சுவையில் செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் தேங்காய் சட்னியை வேறு விதத்தில் அரையுங்கள்.
தேங்காய் சட்னியை வேறு எப்படி அரைப்பது என்று கேட்கலாம். பொதுவாக தேங்காய் சட்னியில் பச்சை மிளகாய் தான் சேர்ப்போம். ஆனால் அடுத்தமுறை தேங்காய் சட்னி அரைப்பதாக இருந்தால் வரமிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக தாளிப்பதற்கு நல்லெண்ணெயை பயன்படுத்துங்கள். இதனால் சட்னி இன்னும் பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு வரமிளகாய் சேர்த்து தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வரமிளகாய் சேர்த்து செய்யும் தேங்காய் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
* வரமிளகாய் - 6
* வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
* பூண்டு - 4 சிறிய பல்
* கல் உப்பு - சுவைக்கேற்ப
* புளி - சிறிய துண்டு
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* வரமிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 7-8 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 1/2 மூடி துருவிய தேங்காய், 5-6
வரமிளகாய், பாதி வெங்காயம் மற்றும் 4 சிறிய பல் பூண்டு சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப கல் உப்பு, சிறிய துண்டு புளி, 2 டேபிள்
ஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி, ஓரளவு கொரகொரவென்று அரைத்து கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த சட்னி இட்லிக்கு என்றால் சற்று நீரை அதிகமாகவும், தோசைக்கு
என்றால், நீரை குறைவாகவும் ஊற்றிக் கொள்ளுங்கள்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
நல்லெண்ணெயை 3 டீஸ்பூன் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி,
சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான தேங்காய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











