Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
தேங்காய் சட்னியை ஒருமுறை இந்த பக்குவத்துல செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா தாறுமாறா இருக்கும்...
Coconut Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி அல்லது தோசை தான் காலை டிபனாக இருக்குமா? அதுவும் இதற்கு அடிக்கடி தேங்காய் சட்னியைத் தான் சைடு டிஷ்ஷாக செய்வீர்களா? எப்போதும் தேங்காய் சட்னியை ஒரே சுவையில் செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் தேங்காய் சட்னியை வேறு விதத்தில் அரையுங்கள்.
தேங்காய் சட்னியை வேறு எப்படி அரைப்பது என்று கேட்கலாம். பொதுவாக தேங்காய் சட்னியில் பச்சை மிளகாய் தான் சேர்ப்போம். ஆனால் அடுத்தமுறை தேங்காய் சட்னி அரைப்பதாக இருந்தால் வரமிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக தாளிப்பதற்கு நல்லெண்ணெயை பயன்படுத்துங்கள். இதனால் சட்னி இன்னும் பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு வரமிளகாய் சேர்த்து தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வரமிளகாய் சேர்த்து செய்யும் தேங்காய் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
* வரமிளகாய் - 6
* வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
* பூண்டு - 4 சிறிய பல்
* கல் உப்பு - சுவைக்கேற்ப
* புளி - சிறிய துண்டு
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* வரமிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 7-8 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 1/2 மூடி துருவிய தேங்காய், 5-6
வரமிளகாய், பாதி வெங்காயம் மற்றும் 4 சிறிய பல் பூண்டு சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப கல் உப்பு, சிறிய துண்டு புளி, 2 டேபிள்
ஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி, ஓரளவு கொரகொரவென்று அரைத்து கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த சட்னி இட்லிக்கு என்றால் சற்று நீரை அதிகமாகவும், தோசைக்கு
என்றால், நீரை குறைவாகவும் ஊற்றிக் கொள்ளுங்கள்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
நல்லெண்ணெயை 3 டீஸ்பூன் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி,
சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான தேங்காய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications