Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
6 பிரட்டும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணி பாருங்க...
Coconut Bread Urundai Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் உங்கள் பிள்ளைகளின் பசியை போக்குமாறு ஒரு அசத்தலான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் வழக்கமாக செய்யும் பஜ்ஜி, போண்டா, வடை என்று செய்யாமல், சற்று வித்தியாசமான ஸ்நாக்ஸை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் பிரட்டும், தேங்காயும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் ஒரு உருண்டை செய்து கொடுங்கள். இந்த உருண்டையில் பாதாம், உலர் திராட்சை போன்றவற்றை வைத்து செய்வதால், இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு தேங்காய் பிரட் உருண்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் பிரட் உருண்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் - 6
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* ஏலக்காய் - 4
* சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
* காய்ச்சிய பால் - 1 டேபிள் ஸ்பூன்
* பாதாம்/உலர் திராட்சை - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பிரட்டை துண்டுகளாக்கி சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் 1/2 கப் துருவிய தேங்காயை சேர்த்து, அத்துடன் வாசனைக்கு
ஏலக்காயை சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து, நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்ததை சேர்த்து, அத்துடன் காய்ச்சி
குளிர வைத்த பாலை 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து, கைகளால் நன்கு சப்பாத்தி
மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு பிசைந்த மாவை கொஞ்சம் எடுத்து உருட்டி தட்டையாக தட்டி, அதன்
நடுவே பாதாம் அல்லது உலர் திராட்சையை வைத்து உருட்டிக் கொள்ள
வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை
சேர்த்து, மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக பொரித்து எடுத்தால்,
சுவையான தேங்காய் பிரட் உருண்டை தயார்.



Click it and Unblock the Notifications








