சௌ சௌ காயை இப்படி ஒருவாட்டி பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி கேட்டு சாப்பிடுவாங்க..

Posted By:

Chow Chow Poriyal Recipe In Tamil: இதுவரை நீங்கள் சௌ சௌ காயைக் கொண்டு கூட்டு, சாம்பார் என்று தான் செய்திருப்பீர்கள். ஆனால் அந்த சௌ சௌ காயைக் கொண்டு அட்டகாசமான சுவையான பொரியல் செய்யலாம் என்பது தெரியுமா? ஆம், சௌ சௌ பொரியல் சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

முக்கியமாக சௌ சௌ காய் பிடிக்காதவர்களுக்கு, இப்படி அந்த காயை பொரியல் செய்து கொடுக்கும் போது, விரும்பி கேட்டு சாப்பிடுவார்கள். அந்த அளவில் இதன் சுவை அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த பொரியல் செய்வதற்கு 10 நிமிடம் போதும். சட்டென்று செய்துவிடலாம்.

Chow Chow Poriyal How To Make a Chow Chow Poriyal Recipe

உங்களுக்கு சௌ சௌ பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சௌ சௌ பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம்/பெரிய வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)
* சௌ சௌ - 1/2 கிலோ (தோல் நீக்கி பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 1/4 ப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* சீரகம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் சௌ சௌ காயின் தோலை நீக்கிவிட்டு, அதை பொடியாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமானதும், கறிவேப்பிலை சேர்த்து கிளறி விடவேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு நறுக்கி வைத்துள்ள சௌ சௌ காயை சேர்த்து, 1 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 1/4 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து, 5-8 நிமிடம் காயை வேக வைக்க வேண்டும்.
* காய் வேவதற்குள், மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து, நீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* காய் நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து நன்கு 3 நிமிடம் கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான சௌ சௌ பொரியல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, November 25, 2024, 12:30 [IST]
Desktop Bottom Promotion