Latest Updates
-
அன்னையர் தின ஸ்பெஷல் பெப்பர் சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து அம்மாவுக்கு செஞ்சு குடுத்து அசத்துங்க! -
இன்றைய ராசிபலன் 10 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துகள் துரத்தப்போகுதாம் -
சூரியன் சுக்கிரனின் ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மாங்காய் வாங்குனா இந்த மாதிரி ஒருதடவை ரசம் வைச்சு பாருங்க - வேற லெவல் சுவையில் இருக்கும் -
விஜய் - திரிஷா வீடியோ: இது வெறும் நட்பா? இணையத்தை அதிரவைக்கும் அந்த வைரல் தருணம்! -
வார ராசிபலன் (10 May 2026-16 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டுமாம் -
பட்டப்பகலில் நடந்த கொடூரம்! பெங்களூரு சம்பவத்திற்குப் பின் பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பாதுகாப்பு ரகசியங்கள்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் பெப்பர் வறுவல் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
Happy Mother's Day 2026: அன்னையர் தினத்தன்று உங்க அம்மாவிடம் இந்த வாழ்த்து செய்திகளில் ஒன்றை சொல்லுங்க -
அம்மாவுக்கு இந்த செடிகளை பரிசளித்தால் அதிர்ஷ்டம் கொட்டும்! அன்னையர் தினத்தில் இதை மட்டும் செய்யாதீங்க!
சௌ சௌ காயை வெச்சு.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு சும்மா அள்ளும்..
Chow Chow Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் இன்று காலை இட்லி அல்லது தோசை செய்ய போறீங்களா? என்ன சட்னி செய்வதென்று யோசனை செய்து கொண்டிருக்கிறீர்களா? சற்று வித்தியாசமான, அதே சமயம் சுவையான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சௌ சௌ காய் உள்ளதா?
அப்படியானால் அந்த காயைக் கொண்டே அட்டகாசமான சுவையில் சட்னி செய்யலாம். இந்த சௌ சௌ சட்னி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதுவும் இட்லி தோசைக்கு இந்த சட்னியை செய்தால், ஒரு இட்லி சாப்பிடும் உங்கள் குழந்தை இன்னொரு இட்லி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு சௌ சௌ சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சௌ சௌ சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சௌ சௌ காய் - 250 கிராம்
* தக்காளி - 2
* பூண்டு - 1 பல்
* பச்சை மிளகாய் - 3
* கொத்தமல்லி - 1 கையளவு
* கறிவேப்பிலை - சிறிது
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1/2 டீஸ்பூன்
* புளி - 1 சிறிய துண்டு
* கல் உப்பு - 3/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/4 கப்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சௌ சௌ காயின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும். அதேப் போல் தக்காளியையும் துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சௌ சௌ காயைப் போட்டு,
அத்துடன் தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை,
மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
சிறிது நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறக்க வேண்டும்.
* பின் மத்து கொண்டு மசித்து சட்னியாக்க வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து,
சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான சௌ சௌ சட்னி தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications











