Latest Updates
-
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஜூன் 2026: இன்று உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
ஜூன் 11-ல் நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம் -
விவாகரத்து இனி சுலபம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தம்பதிகளுக்குக் கொடுக்கும் நிம்மதி என்ன? -
தக்காளி இருந்தா இந்த மாதிரி ஹைதராபாத் தக்காளி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
உங்க வீட்ல பன்னீர் இருக்கா? அப்ப இந்த மாதிரி சில்லி பன்னீர் செஞ்சு பாருங்க... டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும்...!
Chilli Paneer Recipe in Tamil: கோடைகாலம் வந்தாலே குழந்தைகள் வீட்டில் செலவழிக்கும் நேரம் அதிகமாகிவிடும். எனவே அவர்கள் அடிக்கடி நொறுக்குத்தீனி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் சாப்பிட வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா?
உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால், அதை வைத்து ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். அது தான் சில்லி பன்னீர். இது குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் காரசாரமாக சூப்பராக இருக்கும். இந்த பதிவில் சூப்பரான சில்லி பன்னீரை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- பன்னீர் - 200 கிராம்
- நறுக்கிய வெங்காயம் - 1
- குடை மிளகாய் - 1
- பூண்டு - 6
- இஞ்சி - சிறிய துண்டு
- பச்சை மிளகாய் - 3
- உப்பு - தேவையான அளவு
- சர்க்கரை - 1 ஸ்பூன்
- தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்
- ரெட் சில்லி சாஸ் - 1 ஸ்பூன்
- கிரீன் சில்லி சாஸ் - 1 ஸ்பூன்
- சோயா சாஸ் - 2 ஸ்பூன்
- வினிகர் - 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- வெங்காய தாள் - ஒரு கைப்பிடியளவு
பொரிக்க தேவையான பொருட்கள்:
- மைதா - 3 ஸ்பூன்
- சோள மாவு - 6 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- சர்க்கரை - ½ ஸ்பூன்
- மிளகு தூள் - 2 ஸ்பூன்
- சோயா சாஸ் - 1 ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் பன்னீரை சூடான நீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- பின்னர் மைதா மற்றும் சோள மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதில் மிளகு தூள், உப்பு, சிறிது சோயா சாஸ் மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.
- பின்னர் தேவையான அளவு நீர் சேர்த்து லேசாக கெட்டியான கலவையாக நன்கு பிசையவும். அதனுடன் பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பன்னீர் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
- பின்பு ஒரு பாத்திரத்தில் தக்காளி சாஸ், சோயா சாஸ், வினிகர், கிரீன் சில்லி சாஸ், ரெட் சில்லி சாஸ் ஆகியவற்றை சேக்கவும். இதனை நன்றாக நன்கு கலக்கி தனியாக வைக்கவும்.
- பன்னீர் பொரித்து மீதமுள்ள எண்ணெயில் பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின்பு வெங்காயம் மற்றும் குடை மிளகாய், சிறிது உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
- பின்னர் மிளகாய் தூளை சேர்க்கவும். பிறகு சாஸ் கலவை சேர்த்து நன்கு கலந்து, பின்பு பொரித்த பன்னீர் மற்றும் வெங்காயத்தாள் சேர்த்து 2 நிமிடம் கிளறினால் சுவையான் சில்லி பன்னீர் தயார்.



Click it and Unblock the Notifications