Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
மீந்து போன சப்பாத்தி இருந்தா அதை இப்படி செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...!
Chilli Chapati Recipe in Tamil: இட்லி, தோசைக்கு பிறகு பெரும்பாலான இந்திய வீடுகளில் பிரதான உணவாக இருப்பது சப்பாத்திதான். சப்பாத்தி சாப்பிட்டால் எடை குறையும் என்ற நம்பிக்கை மிகவும் பிரபலமானதும் தோசைக்கு மாற்றாக சப்பாத்தி பெரும்பாலான இந்திய வீடுகளுக்குள் நுழைந்து விட்டது. சப்பாத்தியில் சில ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் அதையே தினமும் சாப்பிட்டால் நிச்சயம் விரைவில் வெறுத்துவிடும்.
சப்பாத்தி அதிகம் செய்து மீந்து விட்டால் அடுத்த நாள் காலையில் தூக்கிதான் எறிவோம். அதற்குப் பதிலாக அதனை வேறு வடிவில் சமைத்துக் கொடுத்தால் குழந்தைகள் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி மீந்து போன சப்பாத்தியில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கக்கூடிய சுவையான மற்றும் சூப்பரான உணவுதான் சில்லி சப்பாத்தி.

இந்த சுவையான சில்லி சப்பாத்தியை சூடான சப்பாத்தியிலும் செய்யலாம். குழந்தைகள் விரும்பும் இந்த சில்லி சப்பாத்தியை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- சப்பாத்தி - 4
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
- நறுக்கிய தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 2
- தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- காஷ்மீர் மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிது
- உப்பு - சிறிது
- எண்ணெய் - 4 ஸ்பூன்
செய்முறை:
- சப்பாத்தியை முதலில் சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக்
கொள்ளவும்.
- பின்னர் தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி
வைத்துக் கொள்ளவும். அதேபோல பச்சை மிளகாயை இரண்டாக கீறி
வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை
மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும், சிறிதளவு உப்பு
சேர்த்து தக்காளி குலையும் வரை நன்கு வதக்கவும். தக்காளி நன்கு
வதங்கியதும் மிளகாய் தூள், தக்காளி சாஸ், காஷ்மீர் மிளகாய் தூள்
சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கிளறவும்.
- மசாலா பச்சை வாசனை போனதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் சப்பாத்தி
துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி இறுதியில் மல்லித்தழை தூவி அடுப்பை
அணைக்கவும்.
- சுவையான சில்லி சப்பாத்தி ரெடி. மீந்து போன சப்பாத்தியை இவ்வாறு
செய்து சுவையாக சாப்பிடலாம். குழந்தைகளுக்கும் இது மிகவும் பிடித்த
உணவாக இருக்கும்.



Click it and Unblock the Notifications










