Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
செட்டிநாடு பூண்டு ரசம் ரெசிபி... இந்த ரசம் வைச்சா தெருவே வாசனை வரும்... ட்ரை பண்ணுங்க...!
Chettinad Poondu Rasam in Tamil: செட்டிநாடு உணவுகளுக்கென்று எப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. காரசாரமாக சாப்பிட்ட பின் கடைசியாக ரசம் ஊற்றி சாப்பிடுவது நமது பாரம்பரியமாகும். இது சுவையானதாக மட்டுமில்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. அதனால்தான் தினமும் ரசம் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.
தக்காளி ரசம், வெங்காய ரசம், எலுமிச்சை ரசம் என்று பல்வேறு ரச வகைகள் உள்ளது. அந்த வகையில் செட்டிநாடு பூண்டு ரசம் மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ரசத்தில் ஒன்றாகும். இந்த ரசத்தில் பூண்டு பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் இது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

தினமும் ஒரு பூண்டை உணவில் சேர்க்க நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த பூண்டு ரசத்தை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- 1/4 கப் துவரம் பருப்பு
- புளிச்சாறு
- 2 தக்காளி
- 1 ஸ்பூன் நெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் சீரகம்
- பெருங்காயம்
- 6 பல் நசுக்கிய பூண்டு
- கறிவேப்பிலை
- 1/2 ஸ்பூன் மிளகு
- 1/2 ஸ்பூன் சீரகத்தூள்
- 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 1/2 ஸ்பூன் மல்லித்தூள்
- உப்பு தேவையான அளவு
- 1 ஸ்பூன் சர்க்கரை
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை:
- துவரம் பருப்பை 1 கப் தண்ணீர் ஊற்றி பிரஷர் குக்கரில் சேர்த்து 3 முதல் 4 விசில் வரை வேக வைக்கவும். அடுப்பை அணைத்து விசில் அடங்கும் வரை காத்திருக்கவும். குக்கரிலிருந்து அழுத்தத்தை இயற்கையாக வெளியேற அனுமதிக்கவும். அழுத்தம் வெளியேறியதும், பருப்பை மென்மையாக்க நன்றாக மசிக்கவும்.
- புளியை ஊறவைத்து புளிக்கரைசலை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும், 1 கப் புளிச்சாறு வரும்வரை புளியை கரைக்கவும்.
- நறுக்கிய தக்காளியை மிக்சியில் பேஸ்ட் போல அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- மிதமான தீயில் ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி சூடாக்கவும். கடுகு மற்றும் சீரகம் சேர்த்து அவை பொரியும் வரை காத்திருக்கவும்.
- கடுகு வெடித்ததும், கறிவேப்பிலை, பூண்டு மற்றும் பெருங்காயம் சேர்த்து, பூண்டின் நறுமணம் வரும் வரை சில நொடிகள் வதக்கவும்.
- அதன்பின் தக்காளி பேஸ்ட், புளி தண்ணீர், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், மிளகுத் தூள், சீரக தூள், கொத்தமல்லி தூள், சர்க்கரை மற்றும் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும்.
- சுவையை சரிபார்த்து உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- அடுப்பை சிம்மில் வைத்து, செட்டிநாடு பூண்டு ரசம் ஒரு கொதி நிலைக்கு வரும் வரை கொதிக்க வைக்கவும்.
- ஒரு கொதி வந்ததும், அடுப்பை மிதமானதாக மாற்றி, ரசத்தை 10 நிமிடம் கொதிக்க விடவும்.
- பாத்திரத்தின் ஓரங்களில் நுரை வரத் தொடங்குவது, ரசம் அதன் அனைத்து சுவைகளையும் அடைந்துவிட்டதன் அறிகுறியாகும்.
- இந்த கட்டத்தில், உப்பு மற்றும் மசாலாவை சரிபார்த்து, அதற்கேற்ப சுவையை சரிசெய்து, அடுப்பை அணைக்கவும்.
- அடுப்பை அணைத்தவுடன் அதில் கொத்தமல்லி இலைகளை போட்டு மூடினால் சுவையான தெருவே மணக்கும் செட்டிநாடு பூண்டு ரசம் ரெடி!



Click it and Unblock the Notifications