Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
10 பல் பூண்டும், சின்ன வெங்காயமும் இருந்தா போதும்... சுவையான செட்டிநாடு குழம்பு செய்யலாம்... ட்ரை பண்ணுங்க...!
Chettinadu Poondu Kara Kulambu Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் சாம்பார் அல்லது புளிகுழம்புதான் தினமும் மதியம் பிரதான குழம்பாக இருக்கும். ஒரே மாதிரியான புளிக்குழம்பு, சாம்பார் செய்வது சாப்பிடுபவர்களுக்கு மட்டுமின்றி சமைப்பவர்களுக்கும் நாளடைவில் போரடித்து விடும். அப்படியானால் ஒரு நாள் செட்டிநாடு ரெசிபிக்களை முயற்சி செய்யுங்கள். குறிப்பாக செட்டிநாடு ஸ்டைல் பூண்டு கார குழம்பை முயற்சி செய்து பாருங்கள். ஏனெனில் பூண்டு என்பது அனைத்து சமையலறைகளிலும் இருக்கும் ஒரு அத்தியாவசிய பொருளாகும்.
சின்ன வெங்காயமும், பூண்டும் சேர்ந்து செய்யும் இந்த செட்டிநாடு ஸ்டைல் கார குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் பூண்டு கார குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அதற்கான ரெசிபியை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப்பொருட்கள்:
- சின்ன வெங்காயம் - 15
- பூண்டுப்பல் - 10
- தக்காளி - 1
- புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு
- மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
- காய்ந்த மிளகாய் - 4 அல்லது 5
- தனியா - 1 டீஸ்பூன்
- மிளகு - 1/2 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- வெந்தயம் - கால் டீஸ்பூன்
- கச கசா - 1 டீஸ்பூன்
- இஞ்சி - ஒரு சிறு துண்டு
தாளிக்க:
- நல்லெண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- புளியை தண்ணீரில் ஊற வைத்து, 2 கப் அளவிற்கு புளி தண்ணீரை ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தோலுரித்து வைத்துக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, வறுத்தரைக்க கொடுத்துள்ள பொருட்களை, தனித்தனியாக சிவக்க வறுத்தெடுத்து, நன்கு ஆறியதும், பொடியாக அரைத்தெடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணை காய்ந்ததும் அதில் கடுகு போட்டு, அது வெடித்தவுடன், உளுத்தம் பருப்பைப் போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- பின் அதில் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் அதில் நறுக்கிய தக்காளித் துண்டுகளையும், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்த்து, தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கவும்.
- பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள விழுதினைச் சேர்த்துக் கிளறி, தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.
- குழம்பு கொதித்து வரும் பொழுது, புளித்தண்ணீரைச் சேர்த்து, நன்றாகக் கலக்கி மீண்டும் கொதிக்க விடவும்.
- குழம்பு மீண்டும் கொதித்து, சற்று கெட்டியானவுடன், இறக்கி வைக்கவும். இஞ்சி, பூண்டு சேர்க்கப்பட்ட இந்த காரக் குழம்பு சுவையானது மற்றும் குளிர் காலத்திற்கு மிகவும் ஏற்றது.



Click it and Unblock the Notifications