Latest Updates
-
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை!
சப்பாத்திக்கு இந்த அட்டகாசமான செட்டிநாடு வெள்ளைக் குருமா செய்யுங்க... எத்தனை சப்பாத்தி சுட்டாலும் பத்தாது...!
Chettinad White Kurma Recipe in Tamil: காலை மற்றும் இரவு உணவை பொறுத்தவரை என்ன செய்கிறோம் என்பதை விட அதற்கு என்ன சைடிஷ் செய்கிறோம் என்பதுதான் மிகவும் கடினமான விஷயமாகும். பெரும்பாலான வீடுகளில் காலை மற்றும் இரவு உணவாக இருப்பது இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி போன்றவைதான். இதற்கு பெரும்பாலும் சட்னி அல்லது சாம்பார், சில சமயங்களில் குருமா போன்றவற்றை செய்வோம்.
சிலநாட்களிலேயே அவை போரடித்து விடும், அதுபோன்ற சூழலில் புதிய சைடிஷ்க்காளி செய்ய வேண்டியது கட்டாயமாகும். அப்படி நீங்கள் புதிய சைடிஷ் செய்ய விரும்பினால் இந்த செட்டிநாடு வெள்ளைக் குருமா அதற்கு சிறந்த சாய்ஸாக இருக்கும். செட்டிநாடு உணவுகள் என்றாலே சுவையான உணவுகளாக இருக்கும் என்ற கருத்து மக்களிடையே உள்ளது.

இந்த செட்டிநாட்டு வெள்ளைக் குருமா இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சப்பாத்திக்கும் சூப்பரான சைடிஷாக இருக்கும். இந்த வெள்ளைக்குருமா சுவையானது மட்டுமல்ல செய்வதற்கு மிகவும் எளிதானதும் கூட. இந்த பதிவில் சூப்பரான செட்டிநாட்டு வெள்ளைக் குருமாவை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- பீன்ஸ் கால் கப்
- காரட் கால் கப்
- காலிப்ளவர் - கால் கப்
- பச்சை பட்டாணி - கால் கப்
- உருளைக்கிழங்கு - கால் கப்
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
- நறுக்கிய தக்காளி - 1
மசாலா அரைக்க:
- தேங்காய் - அரை மூடி
- பொட்டுக்கடலை - 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- சோம்பு - 1/4 ஸ்பூன்
- முந்திரி பருப்பு - 5
- பூண்டு - 2 பல்
தாளிக்க:
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் தக்காளி சிறிது உப்பு போட்டு வதக்கவும், தக்காளி நன்கு குலையும் வரை வதக்கவும்.
- மேலும் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மென்மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் காய்கறி கலவையை சேர்த்து நன்றாக வதக்கி சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- இந்த கலவை நன்றாக கொதித்து வரும் சமயத்தில் அரைத்த விழுதை போட்டு கொதிக்க விடவும்.
-
- காய்கறிகள் நன்றாக வெந்த பின் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்துவிடவும்.'
- அட்டகாசமான செட்டிநாடு வெள்ளைக் குருமா ரெடி. இதை சூடான சப்



Click it and Unblock the Notifications











