Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும்
சப்பாத்திக்கு இந்த அட்டகாசமான செட்டிநாடு வெள்ளைக் குருமா செய்யுங்க... எத்தனை சப்பாத்தி சுட்டாலும் பத்தாது...!
Chettinad White Kurma Recipe in Tamil: காலை மற்றும் இரவு உணவை பொறுத்தவரை என்ன செய்கிறோம் என்பதை விட அதற்கு என்ன சைடிஷ் செய்கிறோம் என்பதுதான் மிகவும் கடினமான விஷயமாகும். பெரும்பாலான வீடுகளில் காலை மற்றும் இரவு உணவாக இருப்பது இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி போன்றவைதான். இதற்கு பெரும்பாலும் சட்னி அல்லது சாம்பார், சில சமயங்களில் குருமா போன்றவற்றை செய்வோம்.
சிலநாட்களிலேயே அவை போரடித்து விடும், அதுபோன்ற சூழலில் புதிய சைடிஷ்க்காளி செய்ய வேண்டியது கட்டாயமாகும். அப்படி நீங்கள் புதிய சைடிஷ் செய்ய விரும்பினால் இந்த செட்டிநாடு வெள்ளைக் குருமா அதற்கு சிறந்த சாய்ஸாக இருக்கும். செட்டிநாடு உணவுகள் என்றாலே சுவையான உணவுகளாக இருக்கும் என்ற கருத்து மக்களிடையே உள்ளது.

இந்த செட்டிநாட்டு வெள்ளைக் குருமா இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சப்பாத்திக்கும் சூப்பரான சைடிஷாக இருக்கும். இந்த வெள்ளைக்குருமா சுவையானது மட்டுமல்ல செய்வதற்கு மிகவும் எளிதானதும் கூட. இந்த பதிவில் சூப்பரான செட்டிநாட்டு வெள்ளைக் குருமாவை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- பீன்ஸ் கால் கப்
- காரட் கால் கப்
- காலிப்ளவர் - கால் கப்
- பச்சை பட்டாணி - கால் கப்
- உருளைக்கிழங்கு - கால் கப்
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
- நறுக்கிய தக்காளி - 1
மசாலா அரைக்க:
- தேங்காய் - அரை மூடி
- பொட்டுக்கடலை - 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- சோம்பு - 1/4 ஸ்பூன்
- முந்திரி பருப்பு - 5
- பூண்டு - 2 பல்
தாளிக்க:
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் தக்காளி சிறிது உப்பு போட்டு வதக்கவும், தக்காளி நன்கு குலையும் வரை வதக்கவும்.
- மேலும் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மென்மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் காய்கறி கலவையை சேர்த்து நன்றாக வதக்கி சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- இந்த கலவை நன்றாக கொதித்து வரும் சமயத்தில் அரைத்த விழுதை போட்டு கொதிக்க விடவும்.
-
- காய்கறிகள் நன்றாக வெந்த பின் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்துவிடவும்.'
- அட்டகாசமான செட்டிநாடு வெள்ளைக் குருமா ரெடி. இதை சூடான சப்



Click it and Unblock the Notifications