Just In
- 5 hrs ago
சீனி பணியாரம்
- 6 hrs ago
இந்த 5 உணவுகள் சிறுநீரகத்தை பாதுகாக்கும்னு ஆய்வுகள் நிரூபிச்சிருக்காம்... மறக்காம சாப்பிடுங்க...!
- 7 hrs ago
உங்க கையில இருக்குற மச்சம் அதிர்ஷ்டமானதா? துரதிர்ஷ்டமானதா? இத படிங்க...
- 7 hrs ago
உங்க குரு அல்லது ஆசிரியரை ரொம்ப பிடிக்குமா? அப்ப அவர்களுக்கு இத அனுப்புங்க...ஷாக் ஆகிடுவாங்க!
Don't Miss
- News
கவனிச்சீங்களா! 4 நியமன எம்பிக்களுக்கும் உள்ள "ஒற்றுமை" -இதான் பாஜகவின் "ஆபரேசன் சவுத் இந்தியாவா?"
- Sports
6 ஆண்டுகளுக்கு பிறகு கோலிக்கு சோகம்.. டெஸ்ட் தர வரிசையில் பண்ட் பாய்ச்சல்
- Movies
இளையராஜாவின் சாதனைக்கு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம்...கமல்ஹாசன் வாழ்த்து
- Finance
தவறான வங்கி கணக்கிற்கு 7 லட்சம்.. லாட்டரி என நாடகம்.. போராடி பெற்ற பெண்..!
- Technology
இனி வீடே தியேட்டர் தான்: 50% தள்ளுபடியுடன் Samsung, Realme, Oneplus, Sony ஸ்மார்ட்டிவிகள்!
- Automobiles
இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... மாருதி ஆதிக்கம்!
- Travel
ஆசியாவிலேயே தூய்மையான கிராமம் – மேகாலயாவில் உள்ள மவ்லின்னாங்கின் சுற்றுலாத் தலங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
Chettinaad Prawn Chukka Recipe : செட்டிநாடு இறால் சுக்கா
நீங்கள் இறால் பிரியரா? செட்டிநாடு ஸ்டைல் ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுபவரா? அப்படியானால் இந்த வார விடுமுறையில் இறால் கொண்டு ஒரு செட்டிநாடு ரெசிபியை செய்யுங்கள். அது தான் செட்டிநாடு இறால் சுக்கா. இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இதன் சுவை சிக்கன், மட்டன் சுக்காவைப் போன்று இருக்கும்.
உங்களுக்கு செட்டிநாடு இறால் சுக்கா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு இறால் சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* இறால் - 250 கிராம் (சுத்தம் செய்தது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* புளி - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* உப்பு மற்றும் மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* பூண்டு - 10 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* பச்சை மிளகாய் - 1
* கல்பாசி - சிறு துண்டு
* அன்னாசிப்பூ - சிறு துண்டு
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* பட்டை - 1/2 இன்ச்
* வரமிளகாய் - 1
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 2
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1/4 கப் நீரை ஊற்றி நன்கு நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் 1/2 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த மசாலாவை சேர்த்து குறைவான தீயில் நன்கு கிளறி விட வேண்டும். மசாலாவில் இருந்து நீர் வற்றி, எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் இறாலை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மசாலா இறாலுடன் நன்கு ஒன்று சேர கிளறி விட வேண்டும். அடுத்து அதில் புளிச்சாற்றினை சேர்த்து, 1 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி, 3-5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறால் வெந்ததும், அதில் மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளறி இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான செட்டிநாடு இறால் சுக்கா தயார்.
Image Courtesy: vidyascooking