Just In
- 7 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- 7 hrs ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 9 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 11 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
செட்டிநாடு பூண்டு ரசம்
செட்டிநாடு ரெசிபிக்களில் அசைவ சமையல் மட்டுமின்றி, சைவ ரெசிபிக்களும் அற்புதமாக இருக்கும். அதிலும் செட்டிநாடு ரசம் ரெசிபிக்கள் நன்கு காரசாரமாக அட்டகாசமாக இருக்கும்.
தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது செட்டிநாடு ரெசிபிக்கள். இந்த வகை ரெசிபிக்கள் நன்கு காரசாரமாக இருப்பதுடன், மிகவும் சுவையாகவும் இருக்கும். செட்டிநாடு ரெசிபிக்களில் அசைவ சமையல் மட்டுமின்றி, சைவ ரெசிபிக்களும் அற்புதமாக இருக்கும். அதிலும் செட்டிநாடு ரசம் ரெசிபிக்கள் நன்கு காரசாரமாக அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு சளி பிடித்திருந்தால், செட்டிநாடு பூண்டு ரசம் செய்து சாப்பிடுங்கள்.
கீழே செட்டிநாடு பூண்டு ரசம் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 1/4 கப்
* புளி - 20 கிராம் (1 கப் சுடுநீரில் ஊற வைக்கவும்)
* தக்காளி - 3 (நறுக்கி அரைத்தது)
* நெய் - 1 டேபிள் பூன்
* கடுகு - 1/2 டீபூன்
* சீரகம் - 1/2 டீபூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீபூன்
* பூண்டு - 6 பல்
* கறிவேப்பிலை - சிறிது
* மஞ்சள் தூள் - 1/2 டீபூன்
* மிளகுத் தூள் - 1/2 டீபூன்
* சீரகப் பொடி - 1/2 டீபூன்
* மல்லித் தூள் - 1-1/2 டீபூன்
* மிளகாய் தூள் - 1 டீபூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீபூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை கழுவி குக்கரில் போட்டு, ஒரு கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை கரண்டியால் நன்கு மசித்துக் கொள்ளவும்.
* பின் ஊற வைத்துள்ள புளியை கையால் பிசைந்து, ஒரு கப் அளவில் புளி நீர் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பின்பு தக்காளியை அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் சீரகத்தைப் போட்டு தாளித்து, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
* பின் அரைத்த தகிகாளி, புளி நீர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள், சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும். பின்பு அதில் ஒரு கப் அல்லது தேவையான அளவு நீரை ஊற்றி, மிதமான தீயில் நுரைக்கட்டும் வரை சூடேற்றவும்.
* ரசம் ஒரு கொதி வந்ததும், அடுப்பை அணைத்து, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி சிறிது நேரம் மூடி வைத்தால், சுவையான செட்டிநாடு பூண்டு ரசம் தயார்.
Image Courtesy: archanaskitchen