சப்பாத்தி, பூரிக்கு இப்படி குருமா செய்யுங்க.. வழக்கமா சாப்பிடுறத விட எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..

Posted By:

Chapati Kurma Without Vegetables In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி, பூரி செய்வீர்களா? அதற்கு பெரும்பாலும் உருளைக்கிழங்கு மசாலாவைத் தான் சைடு டிஷ் செய்வீர்களா? இல்லாவிட்டால் வெஜிடேபிள் குருமா செய்வீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? வெறும் வெங்காயம், தக்காளி தான் உள்ளதா? அப்படியானால் கவலை வேண்டாம்.

Chapati Kurma How To Make Simple Chapathi Kurma Without Vegetables

வெறும் வெங்காயம், தக்காளியைக் கொண்டே அருமையான சுவையில் சப்பாத்தி குருமாவை செய்யலாம். இந்த குருமா வெறும் சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த குருமா 10 நிமிடத்தில் சட்டென்று செய்யக்கூடியவாறு இருக்கும்.

இந்த சப்பாத்தி குருமா குறித்து ஸ்ரீதமிழ் சேனல் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த சப்பாத்தி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சப்பாத்தி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 5
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* தண்ணீர் - 1 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

பொடிப்பதற்கு...

* பொட்டுக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 3/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக ப்ரை செய்ய வேண்டும்.
* பின் அதில் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூள் சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை மற்றும் சோம்பை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் பொடித்த பொட்டுக்கடலை மாவுடன், நீர் சேர்த்து கட்டிகளின்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அந்த பொட்டுக்கடலை கலவையை வதங்கி கொண்டிருக்கும் தக்காளியுடன் சேர்த்து கிளறி, 1 1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான சப்பாத்தி குருமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, May 21, 2026, 22:36 [IST]
Desktop Bottom Promotion