Latest Updates
-
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
அடிக்கிற வெயிலுக்கு தோசை மாவு புளிச்சுப் போச்சா? அப்ப அத தூக்கி போடாம இப்படி செஞ்சு சாப்பிடுங்க..
Carrot Onion Dosa Recipe In Tamil: கோடைக்காலம் வந்தாலே பெரும்பாலானோர் சமையலில் சந்திக்கும் ஒரு பிரச்சனை இட்லி, தோசை மாவு புளித்து போவது தான். அதுவும் அரைத்த மறுநாளே வாயில் வைக்க முடியாத அளவில் மாவு புளித்துவிடும். இப்படி மாவு புளித்துவிட்டால், நிறைய பேர் அதை மனம் இல்லாமல் தூக்கி எறிவர். ஆனால் இனிமேல் அப்படி தூக்கி எறியாதீர்கள்.
மாறாக அந்த இட்லி மாவின் புளிப்பை கட்டுப்படுத்தி, நல்ல சத்தான ஒரு தோசை ரெசிபியை செய்து சாப்பிடுங்கள். இந்த தோசைக்கு கார சட்னி அல்லது தக்காளி சட்னி சரியான காம்பினேஷனாக இருக்கும். மேலும் இந்த தோசை வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடுமாறும் இருக்கும்.

உங்களுக்கு புளித்த இட்லி மாவைக் கட்டுப்படுத்தி எப்படி தோசை செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புளித்த இட்லி மாவு கொண்டு செய்யக்கூடிய தோசையின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளித்த இட்லி மாவு - 2 கப்
* ரவை - 1 கப்
* தண்ணீர் - 1 1/4 கப்
* மைதா - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி - சிறிய துண்டு (துருவியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் புளித்த இட்லி மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் மற்றொரு பாத்திரத்தில் 1 கப் ரவையை எடுத்து, அதில் 1 1/4 கப்
தண்ணீரை ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, ஊற வைத்த ரவையை மிக்சர் ஜாரில் போட்டு, நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த ரவையை புளித்த இட்லி மாவுடன் சேர்த்து, அத்துடன் 2
டேபிள் ஸ்பூன் மைதா மாவை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு
கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அந்த மாவுடன் துருவிய இஞ்சி மற்றும் கேரட், பொடியாக நறுக்கிய
பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் சீரகத்தை சேர்த்து, பின் அத்துடன் கறிவேப்பிலை
மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* மாவானது மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி கலந்து
கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும்
வேக வைத்து எடுத்தால், சுவையான பஞ்சு போன்ற தோசை தயார்.



Click it and Unblock the Notifications