Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
1 கப் ரவை வெச்சு காலையில் ஒருமுறை இந்த டிபன் செய்யுங்க.. டேஸ்டியா இருக்கும்..
Bun Dosa Recipe In Tamil: காலையில் இட்லி, தோசை செய்ய மாவு இல்லையா? என்ன டிபன் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ரவை உள்ளதா? அப்படியானால் அந்த ரவையைக் கொண்டு பன் தோசை செய்யுங்கள். இந்த பன் தோசை செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.
மேலும் இது தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக வேலைக்கு செல்பவர்கள் காலையில் வேகமாக செய்யக்கூடியவாறு எளிமையான செய்முறையைக் கொண்டிருக்கும்.

உங்களுக்கு பன் தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன் தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி - சிறு துண்டு
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* ரவை - 1 கப்
* பச்சரிசி - 2 டீஸ்பூன்
* புளித்த தயிர் - 1/4 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* ஆப்ப சோடா - 2 சிட்டிகை
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க
வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள்
சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி கண்ணாடி
வதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் கொத்தமல்லியை சேர்த்து வதக்கி இறக்கி தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் 1 கப் ரவை, 2 டீஸ்பூன் பச்சரிசி மாவு, 1/4 கப்
புளித்த தயிர், 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த ரவையை ஊற்றி, அத்துடன் வதக்கிய
வெங்காய கலவையை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து
கொள்ள வேண்டும். பின் ஒரு தட்டு கொண்டு மூடி வைத்து 10-15 நிமிடம் ஊற
வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் 2 சிட்டிகை ஆப்ப
சோடாவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். மாவை மிகவும் கெட்டியாக
இருந்தால், சிறிது நீரை ஊற்றிக் கொள்ளுங்கள். ஆனால் மிகவும் நீராகவும்
மாவு இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
* பின் ஒரு தாளிப்பு கரண்டி அல்லது குழி கரண்டி அல்லது குழியான ஆப்ப
சட்டியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பின்
அதில் 1 கரண்டி மாவை ஊற்றி, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து வேக
வைக்க வேண்டும்.
* வெந்ததும் மூடியைத் திறந்து, ஒரு ஸ்பூன் கொண்டு அப்படியே திருப்பி
போட்டு மீண்டும் மூடி வைத்து வேக வைத்து, பின் எடுக்க வேண்டும்.
* இதேப் போல் அனைத்து மாவையும் சுட்டு எடுத்தால், சுவையான பன் தோசை
தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications









