Latest Updates
-
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்..
ப்ராக்கோலியை வெச்சு இப்படி சாம்பார் செய்யுங்க.. சாதம், தோசைக்கு சூப்பரா இருக்கும்...
Broccoli Sambar Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி ப்ராக்கோலி வாங்குவீங்களா? இதுவரை ப்ராக்கோலியை நீங்கள் வறுவல், பொரியல் என்று செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அந்த ப்ராக்கோலியைக் கொண்டு சாம்பார் செய்துள்ளீர்களா?
ஆம், ப்ராக்கோலியைக் கொண்டும் சாம்பார் செய்யலாம். இந்த ப்ராக்கோலி சாம்பார் சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு ப்ராக்கோலி சாம்பார் எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ப்ராக்கோலி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 1 கப்
* புளிச்சாறு - 2-3 டேபிள் ஸ்பூன்
* வெல்லம் - 1 சிறிய துண்டு
* தக்காளி - 1
* வெங்காயம் - 1
* ப்ராக்கோலி - 1
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* வரமிளகாய் - 2
* பூண்டு - 2-3 பல்
* கறிவேப்பிலை - சிறிது
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சாம்பார் தூள் - 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பின் அதை கழுவி குக்கரில் போட்டு, 2 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள்
சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், வரமிளகாய், சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின்பு பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அதன் பின் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும்
வரை கிளறி விட வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், சாம்பார் தூள் மற்றும் மஞ்சள் தூள்
சேர்த்து கிளறி, ப்ராக்கோலியை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு வேக வைத்துள்ள பருப்பு மற்றும் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான
அளவு நீரை ஊற்றி, குறைவான தீயில் வைத்து, ப்ராக்கோலி வேகும் வரை நன்கு
கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ப்ராக்கோலி
சாம்பார் தயார்.
Image Courtesy: betterbutter



Click it and Unblock the Notifications










