Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
அட்டகாசமான பிரெட் உப்புமா ரெசிபி... ஒரு தடவை செஞ்சு பாருங்க... இனிமே அடிக்கடி செய்வீங்க...!
Bread Upma Recipe in Tamil: பெரும்பாலான மக்களுக்கு பிடிக்காத ஒரு காலை உணவு என்றால் அது உப்புமாதான். ஆனால் சரியான முறையில் செய்து சரியான சைடிஷ் உடன் சாப்பிடும் போது உப்புமாவும் சிறந்த காலை உணவுதான். பொதுவாக உப்புமா செய்யும் போது அது ரவாவை வைத்தே செய்யப்படுகிறது. உப்புமா போரான உணவாக இருக்க இதுவும் ஒரு காரணமாகும்.
ரவைக்குப் பதிலாக பிரெட் வைத்து செய்யப்படும் உப்புமா என்பது பெரும்பாலான மக்கள் அறியாததாகும். ப்ரெட்டில் உப்பு செய்யும் போது அது வித்தியாசமாக இருப்பதுடன் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாகவும் இருக்கும். காரமான வேர்க்கடலை சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிடும்போது இது சூப்பரான காலை உணவாக இருக்கும். இந்த பதிவில் பிரெட் உப்புமாவை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- 4 பிரெட் துண்டு
- 1 ஸ்பூன் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- ½ ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- அரை ஸ்பூன் துருவிய இஞ்சி
- 2 பச்சை மிளகாய்
- 10 முந்திரி
- ¼ கப் நறுக்கிய வெங்காயம்
- ½ கப் நறுக்கிய தக்காளி
- உப்பு தேவைக்கேற்ப
- கால் ஸ்பூன் மஞ்சள்
- ½ ஸ்பூன் மிளகாய் தூள்
- ½ ஸ்பூன் சர்க்கரை (பால் ரொட்டியைப் பயன்படுத்தினால்
தவிர்க்கவும்)
- தண்ணீர் தேவைக்கேற்ப
- 1 சிட்டிகை பெருங்காயம்
- 2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
செய்முறை:
- ஒரு கடாயை சூடாக்கி, பிரெட்டை இருபுறமும் மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும். முழுமையாக ஆறவிடவும். பின்னர் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- அதே கடாயில் எண்ணெயை ஊற்றி, மிதமான தீயில் முந்திரியை பொன்னிறமாகவும், மொறுமொறுப்பாகவும் மாறும் வரை வறுக்கவும். இவற்றை பிரெட்டுடன் சேர்த்து தனியாக ஒதுக்கி வைக்கவும்.
- பின்னர் அந்த கடாயில் கடுகு மற்றும் உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
- அடுத்து நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கறிவேப்பிலை மொறுமொறுப்பாக மாறும் வரை வதக்கவும்.
- பின்னர் பெருங்காயம் தூவி வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சியை சேர்த்து 30 விநாடிகள் வதக்கவும்.
- அடுத்து தக்காளி, உப்பு மற்றும் மஞ்சள் சேர்க்கவும். தக்காளி நன்கு குலையும் வரை வதக்கவும்.
- பின்னர் மிளகாய் தூள் மற்றும் சர்க்கரை சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை 1 முதல் 2 நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் 3 ஸ்பூன் தண்ணீர் ஊற்றி கலவையை நன்கு கிளறவும்.
- கலவை கெட்டியாகும் வரை சமைக்கவும். ருசி பார்த்து, தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- பின்னர் பிரெட் துண்டுகள் மற்றும் முந்திரி சேர்க்கவும். வெங்காய தக்காளி மசாலாவுடன் பிரெட் நன்றாக கலக்கும் வரை கிளறவும்.
- பின்னர் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
- பிரெட் உப்புமாவை சூடாக பரிமாறலாம். தேவைப்பட்டால் கொஞ்சம் எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications











