1 கப் கருப்பு உளுந்து இருந்தா.. இந்த உருண்டையை செஞ்சு தினமும் 1 சாப்பிடுங்க.. மருந்து மாத்திரையே தேவைப்படாது..

Posted By:

Karuppu Ulundhu Urundai Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொண்டவரா? அடிக்கடி அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் ஏதாவது செய்து கொடுப்பீர்களா? உங்கள் பிள்ளைகள் பலவீனமாக உள்ளார்களா? அதோடு உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி கால் வலி, மூட்டு வலி, இடுப்பு வலியால் அவதிப்படுவார்களா?

அப்படியானால் கருப்பு உளுத்தம் பருப்பை வாங்கி, அதைக் கொண்டு உருண்டை செய்து கொடுங்கள். இப்படி உருண்டை செய்து, அதை தினமும் ஒன்று சாப்பிட கொடுத்து வந்தால், உடல் வலுபெறும் மற்றும் அனைத்து வலிகளும் நீங்கும். அதுவும் இந்த கருப்பு உளுந்து உருண்டையில் கவுனி அரிசியும் சேர்த்திருப்பதால், உடலுக்கு இன்னும் நல்லது.

Black Urad Dal Laddu How To Make a Karuppu Ulundhu Urundai Recipe

உங்களுக்கு இந்த கருப்பு உளுந்து உருண்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு உளுந்து உருண்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* உடைத்த கருப்பு உளுத்தம் பருப்பு - 1 1/2 கப்
* கருப்பு கவுனி அரிசி - 1/4 கப்
* பொட்டுக்கடலை - 3/4 கப்
* சுக்கு - 1/4 டீஸ்பூன்
* வெல்ல பவுடர் - 1 1/2 கப்
* நல்லெண்ணெய் - 3/4 கப்

செய்முறை:

* முதலில் உளுத்தம் பருப்பை நீரில் 2 முறை கழுவி விட்டு, நீரை முழுமையாக வடிகட்ட வேண்டும்.
* பின் ஒரு துணியில் கழுவிய உளுத்தம் பருப்பை போட்டு, 2 மணிநேரம் காய வைக்க வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கழுவி காய வைத்துள்ள உளுத்தம் பருப்பை சேர்த்து, நன்கு வறுக்க வேண்டும்.
* உளுத்தம் பருப்பின் நிறம் லேசாக மாறி நல்ல மணம் வந்ததும், அதை ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கருப்பு கவுனி அரிசியை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து, உளுத்தம் பருப்புடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் பொட்டுக்கடலையை சேர்த்து சிறிது நேரம் வறுத்து, அதையும் உளுத்தம் பருப்புடன் சேர்த்து குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி, லேசாக சூடானதும், அதை இறக்கி, அரைத்து வைத்துள்ள பொடியில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, எண்ணெய் சூடாக இருப்பதால், கரண்டியால் கிளறி விட வேண்டும்.
* கைபொறுக்கும் சூட்டிற்கு வந்தும், கைகளால் மாவை நன்கு பிசைந்து விட வேண்டும்.
* இறுதியாக கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொண்டால், சுவையான கருப்பு உளுத்தம் பருப்பு உருண்டை அல்லது கருப்பு உளுத்தம் பருப்பு லட்டு தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, July 24, 2025, 17:57 [IST]
Desktop Bottom Promotion