Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
எலும்பை வலுவாக்கும் கருப்பு உளுந்து அடை - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. செமயா இருக்கும்..
Black Urad Dal Adai Recipe In Tamil: உங்களுக்கு இடுப்பு வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் உள்ளதா? தினமும் இந்த வலிகள் உங்களை பாடாய் படுத்துகிறதா? அப்படியானால் உங்கள் உணவில் கருப்பு உளுத்தம் பருப்பை அதிகமாக சேர்த்து வாருங்கள். அதுவும் கருப்பு உளுத்தம் பருப்பைக் கொண்டு கஞ்சியாக செய்து குடிக்க பிடிக்காவிட்டால், அதைக் கொண்டு அடை செய்து சாப்பிடுங்கள்.
இப்படி அடை செய்யும் போது, அது சாப்பிட ருசியாக இருக்கும். அதுவும் இந்த அடைக்கு தேங்காய் சட்னி சரியான காம்பினேஷனாக இருக்கும். ஒருமுறை இந்த கருப்பு உளுந்து அடையை செய்து சாப்பிட்டால், பின் அடிக்கடி செய்து சாப்பிடுவீர்கள். குறிப்பாக இது உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஏற்ற காலை டிபனும் கூட.

உங்களுக்கு கருப்பு உளுந்து அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு உளுந்து அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கருப்பு உளுத்தம் பருப்பு - 1 கப் அல்லது 250 கிராம்
* பச்சரிசி - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கருப்பு உளுத்தம் பருப்பை எடுத்து,
அத்துடன் பச்சரிசியை சேர்த்து நீரில் 2 முறை நன்கு கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் சுடுநீரை ஊற்றி, குறைந்தது 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* உளுத்தம் பருப்பு நன்கு ஊறியதும், அதை மிக்சர் ஜாரில் போட்டு, லேசாக
நீரை தெளித்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்ததை எடுத்து, அத்துடன் பொடியாக
நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயத்
தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட
வேண்டும்.
* பிறகு ஒரு பாலிதீன் கவர் அல்லது வாழை இலையை எடுத்து, அதில் எண்ணெய்
தடவி, பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் எடுத்து உருட்டி வைத்து, அடை
போன்று தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில்
தேங்காய் எண்ணெய் ஊற்றி, தட்டி வைத்துள்ளதை சேர்த்து, முன்னும்,
பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான உளுத்தம் பருப்பு
அடை தயார்.



Click it and Unblock the Notifications











