Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற.. பாகற்காய் தால்
பாகற்காயின் கசப்புத்தன்மை தெரியாதவாறு சமைத்து சாப்பிட்டால், குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் பாகற்காயைக் கொண்டு தால் செய்தால், அது சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் அற்புதமாக இருக்கும்.
காய்கறிகளில் பாகற்காய் மிகவும் கசப்புத்தன்மையைக் கொண்டிருந்தாலும், அது உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக இந்த காய் சர்க்கரை நோயாளிகளுக்கு, குடல் புழுக்களைக் கொண்டவர்களுக்கு மிகவும் நல்லது. பாகற்காயின் கசப்புத்தன்மையால் நிறைய பேர் இதை உணவில் அதிகம் சேர்க்கமாட்டார்கள். ஆனால் பாகற்காயின் கசப்புத்தன்மை தெரியாதவாறு சமைத்து சாப்பிட்டால், குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் பாகற்காயைக் கொண்டு தால் செய்தால், அது சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு பாகற்காய் தால் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாகற்காய் தால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பெரிய பாகற்காய் - 1 (பொடியாக நறுக்கியது)
* துவரம் பருப்பு - 1/2 கப்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன்
* வெல்லம் - 3 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம் மற்றும் பாகற்காயை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி இறக்க வேண்டும்.
* பின் குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, அதில் வதக்கி வைத்துள்ள பாகற்காய் மற்றும் வெங்காபயத்தைப் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு, பின் மிதமான தீயில் 5 நிமிடம் வைத்து இறக்க வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, பருப்பையும், காயையும் லேசாக மசித்து விட வேண்டும்.
* பின்பு குக்கரில் உள்ளதை ஒரு வாணலியில் ஊற்றி, அடுப்பில் வைத்து, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு, புளிச்சாறு, வெல்லம், மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதுவும் மிதமான தீயில் வைத்து 15 நிமிடம் கெதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தாலுடன் சேர்த்து கிளறினால், சுவையான பாகற்காய் தால் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











