Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
இட்லி தோசை செஞ்சு போரடிச்சுடுச்சா? அப்ப 1 கப் அவல் வெச்சு ஒரு புதுமையான சுவையில் இந்த ரெசிபியை செய்யுங்க...
Aval Kara Puttu Recipe In Tamil: காலையில் எப்பவும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? சற்று புதுமையாக அதே சமயம் அட்டகாசமான சுவையில் ஒரு காலை உணவு செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் 1 கப் அவல் உள்ளதா? அப்படியானால் அந்த அவலைக் கொண்டு ஒரு சுவையான கார புட்டு செய்யுங்கள்.
இந்த அவல் கார புட்டு ருசியானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு அவல் கார புட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் கார புட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
புட்டு செய்வதற்கு...
* அவல் - 1 கப்
* உப்பு - சிறிது
* தண்ணீர் - 3 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* உப்பு . சுவைக்கேற்ப
* பன்னீர் - 50 கிராம் (துருவியது)
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 1 கப் அவலை போட்டு நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்த அவலை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன்
நீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து புட்டு மாவு பதத்திற்கு பிசைந்து
கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த புட்டு மாவை இட்லி பாத்திரத்தில் வைத்து, 5 நிமிடம் வேக
வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வேர்க்கடலை, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து, வெங்காயம்
கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறிவிட
வேண்டும்.
* பின்பு அதில் துருவிய பன்னீரை சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* இறுதியாக செய்து வைத்துள்ள புட்டு சேர்த்து நன்கு மசாலா அனைத்தும்
புட்டுடன் ஒன்று சேரும் வரை கிளறி இறக்கினால், சுவையான அவல் கார
புட்டு தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications








