Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
மழை நேரத்துல ஒருடைம் ரசத்தை இப்படி அரைச்சு வெச்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Arachuvitta Rasam Recipe In Tamil: மழை பெய்யும் போது சூடான சாதத்துடன் ரசம் ஊற்றி சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். இந்த ரசத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையுடன் அருமையாக இருக்கும். என்ன தான் ரசம் ஒரு சிம்பிளான ரெசிபியாக இருந்தாலும், அனைவராலும் அதை சுவையாக செய்ய முடியாது.
சிலர் என்ன தான் ரசம் வைத்தாலும், சுவையாகவே இருக்காது. மேலும் தற்போது பெரும்பாலான வீடுகளில் கடைகளில் விற்கப்படும் ரசப்பொடியைக் கொண்டு தான் ரசம் செய்யப்படுகிறது. ஆனால் ரசத்திற்கு மசாலா அரைத்து செய்யும் போது அதன் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு அரைச்சுவிட்ட ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரைச்சுவிட்ட ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளி - 1 எலுமிச்சை அளவு
வறுத்து அரைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* சீரகம் - 2 டீஸ்பூன்
* மிளகு - 1 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* வரமிளகாய் - 1
* சின்ன வெங்காயம் - 3
ரசத்துக்கு...
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 2
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 5 பல்
செய்முறை:
* முதலில் புளியை நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முதலில் துவரம் பருப்பை
சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதில் மல்லி, சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம்
வரும் வரை வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் கறிவேப்பிலை, வரமிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து
நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து முதலில் பொடித்து,
பின் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஊற வைத்த புளியை கைகளால் நன்கு பிசைந்து ஒரு பாத்திரத்தில்
புளி நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த புளி நீரில் மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
* அடுத்து தக்காளியை அரைத்து அந்த புளிச்சாற்றுடன் சேர்த்து, தேவையான
அளவு நீரை ஊற்றி, அத்துடன் சிறிது கொத்தமல்லியைத் தூவி தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, வரமிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
கொதிக்க ஆரம்பித்ததும், கரைத்து வைத்துள்ள புளி நீரை ஊற்றி, பூண்டு
பற்களை தட்டிப் போட்டு, நுரைக்க தொடங்கியதும், அடுப்பை அணைத்துவிட்டு
இறக்கினால், சுவையான அரைச்சுவிட்ட ரசம் தயார்.



Click it and Unblock the Notifications