Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
ஆந்திரா டிபன் சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. செமயா இருக்கும்...
Andhra Tiffen Chutney Recipe In Tamil: காலை உங்கள் வீட்டில் எப்போதும் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? அந்த இட்லி, தோசைக்கு ஒரே மாதிரி மற்றும் ஒரே சுவையில் சட்னி செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அதே சமயம் சட்டென்று ஒரு சட்னியை செய்ய வேண்டுமா? அப்படியானால் ஆந்திரா டிபன் சட்னியை செய்யுங்கள்.
இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். இந்த சட்னியை செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள். இந்த சட்னியை பேச்சுலர்கள், வேலைக்கு செல்பவர்கள் தெரிந்து வைத்துக் கொண்டால் அவசர காலத்திற்கு கைக்கொடுக்கும்.

உங்களுக்கு இந்த ஆந்திரா டிபன் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா டிபன் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* பெரிய தக்காளி - 3
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/4 டம்ளர் + தேவையான அளவு
* வறுத்த வேர்க்கடலை - 2 1/2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம், மல்லி சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய 3 பெரிய தக்காளியை
சேர்த்து கிளறி, மூடி வைத்து, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்
* அதன் பின் அதில் புளி மற்றும் சிறிது உப்பு சேர்த்து கிளறி, 1/4
டம்ளர் நீரை ஊற்றி கிளறி மூடி வைத்து, தக்காளி மென்மையாகும் வரை வேக
வைக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கி குளிர வைத்த பொருட்களை சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேணடும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான ஆந்திரா
டிபன் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications