சிக்கனை வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் பச்சை மிளகாய் சிக்கன் செய்யுங்க..காரமும், சுவையும் வேற லெவலில் இருக்கும்!

Posted By:

Andhra Style Green Chilli Chicken Recipe in Tamil: வீட்டில் என்ன தான் விதமாய் சைவ உணவுகளை சாப்பிட்டாலும், அசைவ உணவுகளின் மீது தான் சிலருக்கு அலாதி பிரியம். சைவ உணவுகளை உப்பு சப்பு இல்லாமல் சாப்பிட்டாலும் அசைவ உணவுகளை கார சாரமாக மூக்கில் இருந்து நீர் அளவிற்கு சாப்பிட வேண்டும் என பலர் விரும்புவார்கள்.

காரம் என்றதும் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது மிளகாய் தான். அதிலும் பச்சை மிளகாயை வைத்து சமைக்கும் உணவு வகைகளை சிலர் விரும்பி சாப்பிடுவார்கள். அதே பச்சை மிளகாயை சேர்த்து சிக்கன் சமைத்தால் எப்படி இருக்கும். வாங்க பச்சை மிளகாய் சில்லி சிக்கன் எப்படி ஆந்திர ஸ்டைலில் செய்வது என பார்க்கலாம்.

Andhra Style Green Chilli Chicken Recipe How to Make Andhra Style Green Chilli Chicken

தேவையான பொருட்கள்:

- எண்ணெய் - தேவையான அளவு
- பிரியாணி இலை - 1
- வெங்காயம் - 1
- கருவேப்பிலை - சிறிதளவு
- கரம் மசாலா - ½ டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி இலை - சிறிதளவு

மேரினேட் செய்ய:

- சிக்கன் (எலும்புடன்) - 600 கிராம்
- மஞ்சள்தூள் - ½ டீஸ்பூன்
- உப்பு - 1 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 1 மேசைக்கரண்டி

பச்சை மசாலா விழுது:

- பச்சை மிளகாய் - 10 அல்லது 12
- புதினா - 2 கைப்பிடி அளவு
- கொத்தமல்லி இலைகள் - 2 கைப்பிடி அளவு
- இஞ்சி - சிறிதளவு (ஒரு இஞ்ச் அளவு)
- பூண்டு - 6 பல்
- சீரகம் - 1 டீ ஸ்பூன்
- மிளகு - 1 டீ ஸ்பூன்
- ஏலக்காய் - 2

செய்முறை:

- முதலில் சிக்கனை இரண்டு முறை தண்ணீரில் அலசி கடைசியாக உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அலசி எடுத்து கொள்ளவும்.

- அதனுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குறைந்தது ஒரு மணி நேரம் ஊற விடவும்.

- வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.

- வெங்காயத்தின் மேற்பரப்பில் கருப்பு நிற பூஞ்சை இருந்தால் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

- வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

- பின் மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு, மற்றும் ஏலக்காயை சேர்க்கவும்.

- அதனுடன் தண்ணீரை தேவையான அளவில் சிறிது சிறிதாக சேர்த்து விழுதாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.

- எண்ணெய் காய்ந்ததும் பிரியாணி இலை மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

- அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

- பின் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து மிதமான தீயில் எண்ணெய் பிரித்து வரும் வரை நன்றாக வதக்கவும்.

- அதில் மெரினெட் செய்து வைத்த சிக்கனை சேர்த்து நன்கு கிளறி 5 நிமிடங்களுக்கு பின் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

- சிக்கன் நன்றாக வெந்து மசாலா சுருண்டு வெந்து வரும் வரை வேக விடவும்.

- கடைசியாக கரம் மசாலாவை சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான பச்சை மிளகாய் சில்லி சிக்கன் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Wednesday, July 2, 2025, 16:21 [IST]
Desktop Bottom Promotion