Latest Updates
-
300 ஆண்டுக்கு சனி ஜெயந்தி நாளில் உருவான ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
இன்றைய ராசிபலன் 17 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுதாம் -
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
கணவர் மீது போலீசில் புகார் அளித்த செலின் ஜெட்லி! என்.ஆர்.ஐ திருமணங்களில் ஒளிந்திருக்கும் அந்த அதிர்ச்சி உண்மை என்ன? -
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் தட்டப்பயறு சுரைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
டெங்குவில் இருந்து சீக்கிரம் குணமாகணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க..
ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க..
Andhra Special Guntur Chicken Masala Recipe In Tamil: இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்யப் போகிறீர்களா? அந்த சிக்கனைக் கொண்டு ஒரு புதுவிதமான ரெசிபியை வீட்டில் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்களுக்கு காரசாரமான உணவுகள் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலாவை செய்து சாப்பிடுங்கள்.

இந்த குண்டூர் சிக்கன் மசாலா செய்து, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். சன்டே நாளில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைத்தால், ரசம் வைத்து இந்த குண்டூர் சிக்கன் மசாலாவை செய்யலாம்.
இந்த ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா ரெசிபி குறித்து ஹேமா சுப்ரமணியன் என்பவர் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு இந்த ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* மல்லி விதை - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
மசாலா பேஸ்ட்டிற்கு..
* அரைத்த மசாலா பவுடர் - 1 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 4 பல்
* தண்ணீர் - சிறிது
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 1/2 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மசாலா பேஸ்ட்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* ஊற வைத்த சிக்கன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* அரைத்த மசாலா பவுடர்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - 1/2 கப்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 'வறுத்து
அரைப்பதற்கு' கொடுத்துள்ள பொருட்களான மல்லி, மிளகு, சீரகம், வரமிளகாய்
ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைத்து,
மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்த பொடியில் இருந்து 2 டீஸ்பூன் பொடியை எடுத்து தனியாக ஒரு
கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மீதமுள்ள பொடியுடன்
இஞ்சி, பூண்டு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக பேஸ்ட்
போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் சிக்கனை கழுவி எடுத்து, அத்துடன் மஞ்சள்
தூள், உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா
பேஸ்ட்டை சேர்த்து நன்கு பிரட்டி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து பொரிய விட வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கீறிய 2 பச்சை
மிளகாயை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வெங்காயம் வரும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்த சிக்கனை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு கிளறி விட்டு,
தக்காளி மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை சேர்த்து நன்கு பிரட்டி,
கறிவேப்பிலை தூவி கிளறி, 1/2 கப் நீரை ஊற்றி, அத்துடன் 1/2 டீஸ்பூன்
உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 15 நிமிடம் மிதமான தீயில் வைக்க
வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்தால், சிக்கன் நன்கு வெந்து
இருக்கும். பின் அடுப்பை அணைத்துவிட்டு அதை இறக்கி கொத்தமல்லியைத்
தூவினால், சுவையான ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா தயார்.



Click it and Unblock the Notifications











