Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை!
ஆந்திரா ஸ்டைல் பச்சை மிளகாய் சட்னி... செஞ்சு பாருங்க... காரமும், டேஸ்ட்டும் தாறுமாறா இருக்கும்...!
Andhra Green Chilli Chutney Recipe in Tamil: பொதுவாக ஆந்திரா ஸ்டைல் உணவுகள் என்றாலே காரசாரமாகத்தான் இருக்கும். ஆந்திர உணவுகள் எவ்வளவு காரமாக இருக்கிறதோ அதேயளவிற்கு சுவையானவையும் கூட. ஆந்திராவில் பிரியாணி மட்டுமல்ல பல சுவையான உணவுகள் உள்ளன. ஆந்திராவில் இட்லி, தோசைக்கு பரிமாறப்படும் சட்னிகள் கூட தனித்துவமானதாகவும், காராமானதாகவும் இருக்கும்.
அந்த வகையில் காரமான பச்சை மிளகாய் சட்னி ஒன்று தயாரிக்கப்படுகிறது. இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் காரமாகவும், சுவையாகவும் இருக்கும். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இதை 1 வாரத்திற்கும் மேல் வைத்து சாப்பிடலாம். இந்த பதிவில் காரமான ஆந்திரா பச்சை மிளகாய் சட்னியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1/2 ஸ்பூன் வெந்தயம்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் கருப்பு உளுந்து
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் சீரகம்
- 300 கிராம் காரமான பச்சை மிளகாய்
- 4 - 5 ஸ்பூன் ஸ்பூன் எண்ணெய்(மிளகாய் வறுக்க)
- 3 - 4 ஸ்பூன் கெட்டியான புளி சாறு
- 1 ஸ்பூன் வெல்லம்
- உப்பு தேவைக்கேற்ப
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு விதைகள் வெந்தய விதைகளைச் சேர்த்து, வெந்தயம் பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
- வறுத்த வெந்தயத்துடன், உளுந்து, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து வறுத்து, மிக்ஸியில் மென்மையான பொடியாக அரைக்கவும்.
- அதே வாணலியில், எண்ணெயை சூடாக்கி, மிளகாய்களைச் சேர்த்து, அவை மென்மையாக மாறும் வரை குறைந்த தீயில் வதக்கவும்.
- மிக்ஸியில் சமைத்த மிளகாயைச் சேர்த்து, புளிச் சாறு, வெல்லம், உப்பு மற்றும் அரைத்த மசாலாவைச் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் கரடுமுரடான பேஸ்டாக அரைக்கவும்.
- இந்த சட்னி மூன்று நாட்கள் வெளியேயும், 15 நாட்கள் குளிர்சாதன பெட்டியிலும் கெட்டுப்போகாமல் இருக்கும், தண்ணீர் அதில் படாமல் இருந்தால் போதும்.
- இந்த சட்னியை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம், இல்லையெனில் சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் சுவை தாறுமாறாக இருக்கும்.
- மிக்ஸியில் முதலில் தாளித்த பிறகு மிளகாய்களை அரைக்க வேண்டும். மசாலா பொருட்களை அதனுடன் சேர்த்து அரைக்கக்கூடாது.
- நீங்கள் சட்னியை தாளிக்க விரும்பினால் கடுகு மற்றும் நசுக்கிய பூண்டு சேர்த்து தாளிக்கவும்.



Click it and Unblock the Notifications