ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும்

Posted By:

Aadi Perukku Special Paasiparuppu Payasam Recipe in Tamil: தமிழர்களின் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ஆடிப் பெருக்கு நாளை கொண்டாடப்பட உள்ளது. ஆடிப் பெருக்கு அன்று கடவுளை வழிபட்டு விஷேச உணவு தயாரிப்பது தமிழர்களின் பாரம்பரியமாகும். இந்த ஆடிப்பெருக்கு நாளில் பொதுவாக மக்கள் வீட்டில் வடை பாயாசத்துடன் விருந்து சமைப்பார்கள். இந்த நாளில் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு ஸ்பெஷலாக ஏதாவது செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?

Aadi Perukku Special Recipe How to Make Paasiparuppu Payasam in Tamil

இந்த ஆடிப் பெருக்குக்கு உங்கள் வீட்டில் பாயாசம் செய்வதாக இருந்தால், வழக்கமாக செய்யும் சேமியா அல்லது பால் பாயாசம் செய்யாமல், பாசிப் பருப்பை வைத்து அருமையான பாயாசத்தை செய்யுங்கள். இந்த பாயாசம் வழக்கமான பாயாசம் போல அல்லாமல் வித்தியாசமான சுவையில் அதேசமயம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

உங்களுக்கு இந்த ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் பாசிப் பருப்பு பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாசிப் பருப்பு பாயாச ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- பாசிப்பருப்பு - 1/2 கப்
- தண்ணீர் - 1 கப்
- வெல்லம் - 3/4 கப்
- ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
- கெட்டியான தேங்காய்ப்பால் - 1/2 கப்
- நீர்த்த தேங்காய்ப்பால் - 1 கப்
- நெய் - 1 டீஸ்பூன்
- முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
- உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்
- துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்

செய்முறை:

- பாசிப்பருப்பைத் தண்ணீருடன் சேர்த்து குக்கரில் 5 நிமிடங்கள் வேகவைக்கவும்.

- விசில் அடங்கியதும் வெந்த பருப்பை நன்கு மசித்துக் கொள்ளவும்.

- தேங்காயை துருவி கெட்டியான தேங்காய்ப்பால் மற்றும் நீர்த்த தேங்காய்ப்பாலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

- சிறிது தண்ணீருடன் வெல்லத்தைக் கரைத்து கொதிக்கவிட்டு, அதிலுள்ள அசுத்தங்களை நீக்கி அந்தப் பாகை வடிகட்டவும்.

- வடிகட்டிய வெல்லப்பாகு மற்றும் ஏலக்காய் பொடியை மசித்து வைத்த பருப்புடன் சேர்த்து நன்கு கலக்கவும்.

- இதனுடன் நீர்த்த தேங்காய்ப்பாலைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

- கலவையை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். மிதமான தீயில் 2 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

- இப்போது மற்றொரு வாணலியில் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் திராட்சையைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து ஆறவிடவும்.

- கொதிக்கும் பாயசத்தில் கெட்டியான தேங்காய்ப்பாலைச் சேர்த்து ஒருமுறை கிளறிவிட்டு, அடுப்பிலிருந்து இறக்கவும்.

- வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் திராட்சையைச் சேர்க்கவும்.

- இறுதியாக துருவிய தேங்காயைத் தூவி, சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Sunday, August 2, 2026, 22:36 [IST]
Desktop Bottom Promotion