Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஆடி முதல் ஞாயிறு இந்த பாயாசத்தை வைச்சு சாமி கும்பிடுங்க..சகல நன்மைகளும் தேடி வரும்..எப்படி செய்யணும் தெரியுமா?
Pottukadalai Payasam Recipe in Tamil: முருகனை வளர்த்த கார்த்திகை பெண்கள் பெயரால் கார்த்திகை நட்சத்திரம் அழைக்கப்படுகிறது. முருகனின் பிறந்த விசாக நட்சத்திரத்தை விட அதி சக்தி வாய்ந்தது இந்த கார்த்திகை நட்சத்திரம். ஒவ்வொரு மாதத்திலும் வரும் கார்த்திகை நட்சத்திர நாளில் தான் கிருத்திகை கொண்டப்படுகிறது. அதிலும் அம்பிகைக்கு உரிய மாதமான ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை இன்னும் சிறப்பு. அம்பிகையும் முருகனையும் ஒரு சேர வணங்கி அனைத்து நலன்களையும் பெறலாம்.
அதே போல் ஆடியில் வரும் ஞாயிற்று கிழமையும் விரதத்தை கடைபிடிக்க ஏற்ற நாளாக இருக்கும். சூரியனின் ஆதிக்கம் நிறைந்த நாளான ஞாயிற்று கிழமையில் செய்யும் ஆடி வழிபாடு அனைத்து நன்மைகளையும் தரக் கூடியது. ஆடியின் முதல் ஞாயிற்று கிழமையும் கிருத்திகையும் சேர்த்து வருவது மற்றொரு சிறப்பு. இந்த நாளில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளலாம். எந்த காரியத்தை செய்தாலும் முதலில் விநாயகரையும் குலதெய்வதையும் வழிபட்டு துவங்க நன்மை பயக்கும்.

முடிந்த வரை ஆடி முதல் ஞாயிற்று கிழமை குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்தோ அல்லது சாமிக்கு எப்போதும் செய்யும் படையல் வைத்தோ சாமி கும்பிடலாம். முடியாதவர்கள் வீட்டில் பொங்கல் செய்து நம் வீட்டில் குலதெய்வத்தை நினைத்து படைத்து வணக்கலாம். இல்லை என்றால் எளிமையாக பாலில் நாட்டு சர்க்கரை கலந்து சாமிக்கு நெய்வேத்தியம் செய்யலாம். முடியாதவர்கள் சிறிது அவலில் நாட்டு சர்க்கரை மற்றும் பொட்டு கடலை வைத்து வணங்கலாம்.
இந்த முதல் ஞாயிற்று கிழமை நல்ல நாளில் எழுந்து குளித்து விட்டு எளிதான பிரசாதம் செய்து வைத்து முழு முதற்கடவுள் விநாயகர், உங்கள் குலதெய்வ, அம்பிகை மற்றும் முருகனை வணங்கி அனைவரின் ஆசியையும் ஒரு சேர பெற்று நல்வாழ்வை பெறுங்கள்.
ஆடி மாச அமர்க்களமாக பல வகையான உணவுகள் பதார்த்தங்கள் செய்து வழிபடுவோம். அதை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க. அதனால் பிரசாதம் செய்யும் போது அவர்களுக்கு ஏற்றார் போல மாற்றி மாற்றி செய்தால் நன்றாக இருக்கும். அதே போல் செய்ய எளிதாக இருந்தால் உங்களுக்கும் எளிதாக இருக்கும். சரி வாங்க வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி பொட்டுக்கடலை பாயாசம் செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- பொட்டுக்கடலை - 1 கப்
- வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - 1 ½ கப் (சுவைக்கு ஏற்ப கூட்டி
குறைத்து கொள்ளவும்)
- நெய் - 2 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் - 2
- தேங்காய் - 1 மூடி
- முந்திரி - 5
- திராட்சை - 8
செய்முறை:
- முதலில் பொட்டுக்கடலையை வாணலியில் சேர்த்து வாசம் வரும் வரை
வறுத்து ஆற வைத்து பொடியாக அரைத்து கொள்ளவும்.
- அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைத்து எடுத்து
வைக்கவும்.
- ஏலக்காய் மற்றும் தேங்காயை மிக்ஸியில் சேர்த்து அரைத்து பால்
எடுத்து கொள்ளவும்.
- முந்திரி மற்றும் திராட்சையை நெய்யில் வறுத்து எடுத்து
கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மூன்று கப் அளவிற்கு தண்ணீர்
சேர்த்து கொதிக்க விடவும்.
- பின் அரைத்து வைத்த பொட்டுக்கடலை சேர்த்து பச்சை வாசம் போகும்
வரை
கொதிக்க விடவும்.
- அதனுடன் வெல்லத்தை சேர்த்து கரையும் வரை நன்கு கிளறவும்.
- பின் அரைத்து வைத்த தேங்காய் பாலை சேர்க்கவும். தேங்காய் பால்
சேர்க்க விரும்பவில்லை என்றால் காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்து
கொள்ளலாம்.
- கடைசியாக நெயில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கிளறி
இறக்கினால் பொட்டுக்கடலை பாயாசம் ரெடி!



Click it and Unblock the Notifications








